5:37 AM

திதி

திதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.
இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.
எண்கிருஷ்ண பட்சம்சுக்கில பட்சம்தெய்வம் மற்றும் செய்ய வேண்டியவை!
1பிரதமைபிரதமைமுதல் சந்திர நாள் முக்கிய தெய்வம் அக்னி ஆகும். பூஜைகள் மற்றும் மங்கள காரியங்கள் செய்ய உகந்த நாள்.
2துவி்தியைதுவி்தியைஇது ப்ரம்மாவுக்கு உரிய நாள் இன்று கட்டிடம் கட்டுவதர்கான அஸ்திவாரம் அமைத்தல் மற்றும் நிலைத்தன்மை கொண்டவை உருவாக்குதல் நன்மைதரும்.
3திருதியைதிருதியைகெளரிமாதாவுக்கு உகந்த நாள்.சிகை திருத்தம் செய்தல்,முகசவரம், நகம் வெட்டுதல் முதலியன நன்ைம தரும்.
4சதுர்த்திசதுர்த்திநான்காம் நாள் எமன் மற்றும் வினாயகருக்குரிய நாள். எதிரிகளை வீள்த்துதல்,தடை தகர்தல் முதலிய போர் காரியங்கள் வெற்றி தரும்.
5பஞ்சமிபஞ்சமிஇது நாகதேவனின் நாள்,விஷம் முரித்தல்,மருத்துவம் செய்தல் அறுவை சிகிச்சை முதலியன பலன் தரும்.
6சஷ்டிசஷ்டிநாளின் தெய்வம் முருகன்.புதிய நண்பர்களை சந்தித்தல்,கொண்டாட்டம் கேளிக்கை முதலியன சிறப்பு.
7சப்தமிசப்தமிசூரியனின் நாள்.பிரயாணம் தொடங்குதல்,பிரயாண படி கேட்டல், முதலிய நகர்தல் சம்மநதமான காரியங்கள் கைகூடும்.
8அஷ்டமிஅஷ்டமிஇன்னாளின் கடவுள் மஹாருத்ரன் ஆவார்.ஆயுதம் எடுத்தல்,அரன் அமைத்தல்,போர் மற்றும் தற்காப்பு கலை கற்றல் ஆகியவை உகநதது
9நவமிநவமிஅம்பிகையின் நாள்.எதிரிகளை கொல்லுதல்,வினாசம் செய்தல்.
10தசமிதசமிதர்மராஜாவின் நாள்.மதவிழாக்கள்,ஆன்மீக செயல்கள் நன்மை தரும்.
11ஏகாதசிஏகாதசிமஹாருத்ரனின் நாள். இன்னாளில் விரதம் மேற்கொள்ளுதல் மற்றும் பரமாத்வாவை தியனிதல் சிறப்பு.
12துவாதசிதுவாதசிமஹாவிஷ்ணுவின் ஆதிக்கமுடய நாள்.விளக்கு ஏற்றுதல், மதவிளாக்கள், பணிகள் செய்தல்.
13திரயோதசிதிரயோதசிமன்மதனின் நாள்.அன்பு செலுதுதல்,நட்பு வளர்தல்.
14சதுர்த்தசிசதுர்த்தசிகாளியின் ஆதிக்கமுடய நாள்.விஷத்தை கைய்யாளுதல்,தேவதைகளை அைழத்தல்.
15அமாவாசைபௌர்ணமிஅமாவாசை பித்ருகளுக்கு காரியங்கள் செய்யவும்.பௌர்ணமி அன்று அக்னிக்கு ஆஹுதி கொடுத்தல் முதலியன நலம் தரும்.

4:19 AM

ஜாமக்கோள் பலன்கள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள Golden Rule அனைத்தும் பிரபல பிரசன்ன ஆராய்ச்சியாளரிடம் இருந்து பெறப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் 95% உண்மையாகிறது (இவை உதயம் ஆருடத்திற்க்கு பார்க்க வேண்டியவை) நமது சாப்ட்வேரில் இவ்வாறு கிரக சேர்க்கை வந்தால் வெளியில் காட்டும்படியாக அமைக்கப்பட்டுள்ளது (Two Option-மறைக்க-பார்க்க). இது நமது சாப்ட்வேரின் சிறப்பு அம்சம். (மேலும் பல சூட்சமங்களும் இணக்கப்பட்டு உள்ளது)*****(ஜாதகம் பார்க்க வந்து உள்ளவரின் அப்பொழுதய நிலையை காட்டும் அமைப்புக்கள் இவை) 

1. 1ல் சுக்கரன் –காமம் அதிகம் உண்டு.
2. 2ல் சுக்கரன் கள்ளத் தொடர்பு கட்டாயம் இருக்கும்
3. 4ல் சந்திரன் நல்ல வீடு உண்டு, தாயாரால் பிரச்சினை
4. 5ல் சனி(வக்கரம்) வேலைக்காரகளால் தொந்தரவு, மாமன் இல்லை. பிரகார தெய்வ வழிபாடு
5. 6ல் செவ்வாய் கணவனை மதியாள். எதிரிகள் அதிகம்
6. 4க்கு கேந்தித்தில் சூரியன் தாகப்பன் சொத்து இல்லை
7. 10ல் சுக்கிரன் பணக்கார வாழ்வு பின்னாளில் உண்டு
8. செவ்வாய், சந்திரன் நல்ல நிலையில் விவசாய நிலம் உண்டு
9. பதன உச்சம் காலி மனைகள் காலி இடங்கள் உண்டு. கணவன் மனைவினே அன்யோன்யம், மிக்க கேளிக்கையுடன் சந்தோஷம்
10. சுக்ரன் சனி நல்ல பொருளாதாரம் உண்டு
11. சந்திரன் சனி ராகு வெளிநாடு செல்லுதல், பயன கிரகங்கள்
12. 7ல் குரு சாதுக்களின் சாபம்
13. 10க்குடையவன் 3ல் சொந்த இடத்தில் தொழில் அமையாது
14. குரு சந்திரன் ராகு உணவு விஷம்
15. 10ல் நீச கிரகம் சொந்தப் பொருளை அனுபவிக்க இயலா நிலை
16. செவ்வாய் சந்திரன் கேது திருமண வெறுப்பு
17. சந்திரன் சுக்ரன் ராகு சனி அருவறுப்பு நோய்
18. குரு புதன் சந்திரன் கேது பிரம்மச்சாரு, தாமதத்திருமணம்
19. குரு கேது தாமத்த்திருமணம்
20. குரு சந்திரன் புதன் சூரியன் காதல் திருமணம்
21. 2க்குரியவன் 9,11ல் இரண்டுதிருமணம்
22. செவ்வாய் சுக்கரன சந்திரன் படி தாண்டும் திருட்டு உறவு
23. 6க்குடையவன் திசையில் நொடிந்து போவார்கள், ஐபி கொடுத்தல்
24. செவ்வாய் புதன் சந்திரன் கோழை
25. 8ம் அதிபதி 8 ல் எங்குசென்றாலும் சொந்த ஊர் திரும்புதல்
26. 6,8க்குடையவர்கள்12ல் மறைதல் அக்காதங்கை உறவு பார்க்காது.
27. அஷ்டமச் சனி( உதயத்திற்க்கு 8ல் சனி) தன் பேராசைக்காக தன்னை வளர்த்தவருடன் போராடுதல், பேராகசை அதிகமாகும் காலம்
28. 2ல் செவ்வாய் கோபம் குடி கெடுக்கும் நிலை
29: .சந்திராஷ்டம்ம்(தொந்தரவு)
30. 3ல் குரு தம்பியை ஏமாற்றும் நாடகதாரி, காதில் காற்றுடைப்பு
31. 11ல் சூரியன் பழம் நழுவிபாலில் விழுதல்
32. செவ்வாய் எங்கிருப்பினும் அதனின்று 10ம் வீடு கெடும்
33. 3ல் சனி(அ) வாக்கரம் தன் படிப்பை பாதியில் நிறுத்துதம்
34. சூரியன் சந்திரன் குடும்ப நபர்களில் யாரேனும் ஒருவர் திருமணப் பிரிவுடன் இருப்பிர்.
35. குரு சந்திரன் நல்ல செல்ல வளம் பெயர் தந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் மனக்கசப்பே, உடன் பிறந்த சகோதரர் வாழ்க்கையைக் கெடுக்கும்.
36. குரு சந்திரன் நல்ல செவ்வாய் பெயர் தந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் மனக்கசப்பே உடன் பிறந்த சகோதரர் வாழ்க்கையைக் கெடுக்கும் புத்திர தோஷத்தைக் காட்டும்.
37. 10 ல் செவ்வாய் சொந்தத் தொழில செய்வதைக்காட்டும்.
38. 5ல் செவ்வாய் தகப்பன் காலத்திற்குப் பின் யோகம் தருகிறது.
39. ஆருடத்தில் ராகு வாழாத பெண்கள் உள்ள நிலை.
40. 6ஆம் அதிபதி நீச்சம் திருடிய பொருள் தங்காது.
41. 7ஆம் அதிபதி நீச்சம் மனைவி தங்காது, மனைவியின் பொருள் தங்கது (அ) எதிராளி (அ) பார்ட்னர் இருக்கமாட்டார்
42. 8ம் அதிபதி நீச்சம் ஆயுள் தொந்தரவு
43. குருவிற்கு 5,7,9 ல் கிரகம் இல்லை அற்ப ஆயுள், நோயாளி
44. 7மிடம் திருடனின் நிலையை குறிக்கும்
45. 7ம் அதிபதி திருடனைக் குறிக்கும்
46. செவ்வாய் சனி ராகு பெரிய விபத்தைக் தரும் நிலையை காட்டுகிறது
47. சுக்ரன் அஸ்தமனம் திருமணத் தாமதம். மனைவி தங்காமை, கண்கோளாறு, உடம்பின் முக்கிய சுரப்பகள் இயங்காத நிலை
48. 1,7 க்குடையவர்கள் 6,8,12 இருப்பின் விரைவில் பிரிவு
49. சனி சந்திரன் ஆஸ்துமா, புணர்பு யோகம் (திருமணத்தைத் தாமதப்படுத்த பொருளாதாரம் பாதித்தால் திருமணம் எளிதில், விரைவில் முடிந்து விடுகிறது) பந்தல் வரை போய் திருமணம் நின்றுபோனது புணர்பு யோகத்தினால்.
50. புதன் சந்திரன் சனி இழுவைச் சனி
51. சந்திரன் புதன் டென்சன் பேர்வழி, மன அழுத்தம்
52. 8ல் குரு வரட்டுப் பிடிவாதம்
53. 4,8 க்குடையவர் சேர்க்கை வண்டி வாகன மிருகாதி விபத்துக்கள்
54. 3ல் செவ்வாய் குருட்டுத் தைரியம்
55. 5ல் சனி உதயத்தில் சனி நீசமான தெய்வம் (கருப்பராயன், முனியம்மாள், பாவாடைத் தாய், பிரகார தெய்வங்களை குறிக்கும்)
56. லக்னம், சனி 3 பாகைக்குள் அற்பாயுள்
57. மாந்தி சனி 3 பாகைக்குள் அற்பாயுள்
58. குரு சனி இளமையில் தொழில், நரம்பு சம்பந்தமான நோய்கள்
59. 5ல் கேது பூர்விகம் போராடி கிடைக்கும்
60. 8ல் செவ்வாய் சனி மாங்கல்ய தோஷம் 100 சதவீதம்
61. 10ல் சந்திரன் நீச்சம் கடன் அடையாது
62. 7க்குடையவர் 10ல் நீச்சம் கடன் அடையாது
63. 4ல் சனி, 4ம் அதிபதி நீசம், 4ல் நீசம் நம்பி மோசம் போதல், நம்பிக்கை இழத்தல்
64. 8ம் ஆதி 7ல் முதுகு வலி
65. குரு புதன் அதிக நண்பர்கள்
66. 11ல் புதன், 5ல் புதன் ஜோதிடர்
67. 9ல் பாம்பு 10ல் பாம்பு மாந்தீரீகர்
68. சந்திரன் சுக்கிரன் பரிவர்த்தனை பல மனைவிகள், பணத்தைட்டுப்பாடு
69. சந்திரன் புதன் சுக்ரன் கட்டுப்பாடற்ற மனம்
70. செவ்வாய் புதன் குடிகாரன்.
71. நீச்ச சந்திரன் செவ்வாய் தவறான பழக்கம்
72. 3ல் சுக்ரன் சந்தேகப் புத்தி, மறைமுக உறவு
73. சந்திரன் கேது மன நிலைதடுமாற்றம்
74. சந்திரன் புதன் சுக்கிரன் அருவருக்கத்தக்க நோய்
75. உதய லக்கன ராகு பெருத்த உடல், மச்சம் முகத்தில் உண்டு
76. 10ல் வக்ரம் கிரகம், 10ம் அதிபதி வக்ரம் தொழிலில் தனித்து இயங்கா நிலையை தருகிறது
77. சனி நீச்சம் தொழிலில் தனித்து இயங்கா நிலை
78. 4,6,8,12-ல் முதலீடு தொழில் வேண்டாம், சுயதொழில் அமைய போரட்டம்

4:19 AM

சந்திரனின் முக்கியத்துவம்

சந்திராஷ்டமம் என்றால் என்ன; அது என்ன செய்யும்?



ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும் எந்தெந்த நேரங்களில் என்ன காரியங்கள் தொடங்கலாம், எந்த காலகட்டங் களை தவிர்க்க வேண்டும் போன்றவற்றையும்  தெரிந்துகொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில், காலம்  காலமாக இருந்து வரும் ஒரு நடைமுறை, சந்திராஷ்டமம்.

சந்திரனின் முக்கியத்துவம்

ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியா கும். ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட் டைக் குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். அதே நேரத்தில் புதன்  இருக்கும் இடத்தையோ, குரு இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில்லை. இதில் இருந்து சந்திரனின் முக்கி யத்துவத்தை நாம் தெரிந்துகொள்ளலாம்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் பிறந்தநாள் கொண்டாடுகிறோம். 
சந்திரன் இருக்கும் நட்சத்திரம் மூலம்தான் திருமணப் பொருத்தம் பார்க்கிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம்.
சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோச்சார பலன்களைப் பார்க்கிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை சொல்லித்தான் கோயிலில் அர்ச்சனை, வழிபாடுகள் செய்கிறோம்.
இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு யோகங்கள், அவயோகங்கள், தடைகள் ஏற்படுகின்றன. அந்த  வகையான இடையூறுகளில் ஒவ்வொரு மாதமும் சந்திரனால் ஏற்படும் தோஷங்களில் ‘சந்திராஷ்டமம்’ ஒன்று.

சந்திராஷ்டமம்

நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே  சந்திராஷ்டமம் என்கிறோம்.  சந்திரன்+அஷ்டமம்= சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான்  ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ் சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும். பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள்,  இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக  தனம், குடும்பம், வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன. 

ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய  இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம்,  வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள்,  புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள். குடும்ப விஷயங்களை யும் பேச மாட்டார்கள். ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன.  

எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம்  எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும் உச்சம், ஆட்சி, நீச்சம்  போன்ற அமைப்புகளில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடு பலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்களில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரன் இருக்கும் இடம் சந்திரன் தினக்கோள் ஆகும். 

வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும். இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது, அதே  நேரத்தில் லாப-நஷ்டங்கள்,  நிறை-குறைகள் ஏற்படுகின்றன. நம் ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன  பலன்கள் ஏற்படும்?
சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும்போது: மனம் அலை பாயும், சிந்தனை அதிகரிக்கும். ஞாபக மறதி உண்டாகலாம். இரண்டாம் இடத்தில் இருக்கும்போது: பணவரவுக்கு வாய்ப்புண்டு. பேச்சில் நளினமிருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வ ளம் மிகும்.

மூன்றாம் இடத்தில் இருக்கும்போது: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள். நான்காம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், மனமகிழ்ச்சி, உற்சாகம், தாய்வழி ஆதரவு.

ஐந்தாம் இடத்தில் இருக்கும்போது: ஆன்மிக பயணங்கள், தெய்வ பக்தி, நல்ல எண்ணங்கள், தெளிந்த மனம். தாய் மாமன்  ஆதரவு.

ஆறாம் இடத்தில் இருக்கும்போது: கோபதாபங்கள், எரிச்சல், டென்ஷன். வீண் விரயங்கள். மறதி, நஷ்டங்கள்.

ஏழாம் இடத்தில் இருக்கும்போது: காதல் நளினங்கள், பயணங்கள், சுற்றுலாக்கள், குதூகலம். பெண்களால் லாபம், மகிழ்ச்சி.

எட்டாம் இடத்தில் இருக்கும்போது: இதைத்தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம். இந்நாளில் மௌனம் காத்தல் நல்லது. தியானம் மேற்கொள்ளலாம். கோயிலுக்குச் சென்று வரலாம்.

ஒன்பதாம் இடத்தில் இருக்கும்போது: காரிய வெற்றி, சுபசெய்தி, ஆலய தரிசனம்.

பத்தாம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், நிறை-குறைகள், பண வரவு, அலைச்சல், உடல் உபாதைகள்.

பதினொன்றாம் இடத்தில் இருக்கும்போது: தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை, மூத்த சகோதரரால் உதவி, மன  அமைதி, தரும சிந்தனை.

பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும்போது: வீண் விரயங்கள், டென்ஷன், மறதி, கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள்.

17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன்

உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை எளிதில் அறிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள்  நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே, சந்திராஷ்டம தினமாகும். உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நலம் தரும்.

பிறந்த நட்சத்திரம் சந்திராஷ்டம நட்சத்திரம்

அஸ்வினி    அனுஷம்
பரணி    கேட்டை
கிருத்திகை    மூலம்
ரோகிணி    பூராடம்
மிருகசீரிஷம்    உத்திராடம்
திருவாதிரை    திருவோணம்
புனர்பூசம்    அவிட்டம்
பூசம்    சதயம்
ஆயில்யம்    பூரட்டாதி
மகம்    உத்திரட்டாதி
பூரம்    ரேவதி
உத்திரம்    அஸ்வினி
அஸ்தம்    பரணி
சித்திரை    கிருத்திகை
சுவாதி    ரோகிணி
விசாகம்    மிருகசீரிஷம்
அனுஷம்    திருவாதிரை
கேட்டை    புனர்பூசம்
மூலம்    பூசம்
பூராடம்    ஆயில்யம்
உத்திராடம்    மகம்
திருவோணம்    பூரம்
அவிட்டம்    உத்திரம்
சதயம்    அஸ்தம்
பூரட்டாதி    சித்திரை
உத்திரட்டாதி    சுவாதி
ரேவதி    விசாகம்

4:13 AM

கிரகங்களின் பொது குணம்

சூரியன்

ஆன்மாவை பிரதிபலிப்பவன் சூரியன். ஓருவருக்கு ஆத்மபலம் அமையவேண்டுமானால் சூரியபலம் ஜாதகத்தில் அமையவேண்டும். சூரியனை வணங்கி ஆதித்திய ஷிருதய மந்திரத்தால் இராமன் இராவனனை வெல்லும் ஆற்றல் பெற்றான். வேதங்களில் தலைசிறந்த மந்திரம் காயத்ரீ. காயத்ரீ மந்திரத்துக்கு உரியவன் சூரியன். சூரியநமஸ்காரம் என்ற ஓரு விசேஷமான வழிபாடு முறை உண்டு. இதை செய்வதில் ஆன்மீக பலமும் சரிர பலமும் அடையமுடியும் என்பது அனுபவம் கண்ட உண்மை. சுயநிலை,சுய-உயர்வு, செல்வாக்கு கௌரவம், ஆற்றல், வீரம், பராகிரமம், சரிர சுகம், நன்நடத்தை நேத்திரம், உஷ்ணம், ஓளி அரசாங்க ஆதரவு முதலியவற்றின் காரன் சூரியன்.
சூரியன் அக்கினியை அதிதேவதையாக கொண்டவன். கதிரவன், ரவி, பகலவன் என பல பெயர்கள் உண்டு. தகப்பனை குறிக்கும் கிரகம் சூரியன். உத்திரம், உத்திரட்டாதி, கார்திகை நட்சத்திரக்கு உரியவன். சூரியனுக்கு சொந்த வீடு சிம்மம். உச்ச வீடு மேஷம், நீச்ச வீடு சுக்கிரன்.

செவ்வாய்


அங்காரகன், குஜன்,மங்களன் என்ற பெயர்களும் உண்டு. முதல் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்ற அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், நாட்டு தளபதிகள், நீதிபதிகள், பொரியியல் வல்லுனர்கள் முதலானோர்களின் ஜாதகங்களில் செவ்வாயின் பலம் இருந்தே தீரும் என்பது உறுதி.
பெருந்தன்மை அதே நேரத்தில் கண்டிப்பு, தொண்டு செய்தல், தலைமை வகித்தல், வைராக்கியம், பகைவரை வெல்லும் பராக்கிரம் இவற்றை வழங்குபவன் செவ்வாய் கிரகம். ரத்தத்திற்க்கும், சகோதரத்திற்க்கும் காரகன். மேஷம், விருச்சிகம் ஆட்சி வீடுகள். மகரம் உச்ச வீடு, கடகம் நீச வீடு.
அவிட்டம், மிருக சீரிடம், சித்திரை நட்சத்திரங்கள் செவ்வாய்க்கு உரிய நட்சத்திரங்கள். ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுடையவர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆவதில்லை. லக்னத்திற்கு 2,4,7,8,12 இவைகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு. ஆனால் செவ்வாய் குருவோடு சேர்ந்தாலும், சனி, ராகு, கேதுவோடு சேர்ந்தாலும் செவ்வாய் தோஷம் பரிகாரம் ஆகிவடும். செவ்வாய் குருவோடு சேர்ந்தால் குருமங்கள யோகம் உண்டாகும். செவ்வாய் சந்திரனோடு சேர்ந்தால் சந்திரமங்கள யோகம் உண்டாகும்.

சந்திரன்

மனதிற்க்கும், உடலுக்கும் காரகன் சந்திரன். உலக வாழ்வுக்கு சரிர பலம் முக்கியம். சரிர பலத்திற்க்கு மனவளம் அடிப்படை. ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றிருந்தால் இரண்டையுமே அடைய முடியும். ரோகினி அஸ்தம் திருவோணம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன் சந்திரன். தாய்க்கு காரகன் சந்திரன். கடகம் ஆட்சி எனும் சொந்த வீடு, ரிஷபம் உச்ச வீடு, விருச்சிகம் நீச வீடு. திருமண பொருத்தங்கள் சந்திரன் சஞ்சாரம் செய்யும் நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டே உறுதிபடுத்தபட்டு வருகின்றன. சுபமுகர்தங்கள் நிச்சயிக்கபடுவதும் சந்திரனைக் கொண்டுதான். நாம் பிறக்கும் போது சந்திரன் இருந்த வீட்டை வைத்துதான் கோச்சார பலன்கள் நிர்ணயிக்கபடுகின்றது. சந்திரன் ஜாதகத்தில் அமைந்த வீடு தான் இராசி எனப்படுகிறது.

சூரியனோடு கோச்சார ரீதியாக சேரும் பொழுது அமாவாசை ஆகின்றது.

சூரியனும், சந்திரனும் ஓன்றுக்கொன்று பார்வையிடும் பொழுது அதாவது நேர்கோட்டில் 180 பாகையில் சந்திக்கும் பொழுது பௌர்ணமி ஆகின்றது.

புதன்

சுபகிரக வரிசையில் புதனும் சேரும். ஆனால் புதனோடு பாவகிரகங்கள் சேர்ந்தால் பாவி ஆகிவிடும். புதன் அலிக்கிரகம். எந்த கிரகத்தோடு சேர்கிறதோ அந்த கிரகத்தின் தன்மை பிரதிபல்க்கும். கேட்டை, ஆயில்யம், ரேவதி இந்த மூன்று நட்சத்திரங்களின் நாயகன். முதுன ராசிக்கும், கன்னி ராசிக்கும் அதிபதி புதனே.

புதன் ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்று சூரியனோடு சேர்ந்தால் புதஆதித்ய யோகம் உண்டாகும். இதனால் கல்வி மூலம் பெரிய அந்தஸ்த்தை ஏற்படுத்தும். புதன் -வித்யாகாரகன். கல்வி வித்தை, தொழில் இவைகளின் மூலம் சிறப்பை ஏற்படுத்துபவன். நாடகம் மற்றும் நடன அமைப்புகளுக்கு புதனுடைய பலமே காரணம்.

நகைச்சுவை ததும்பும் நயமான பேச்சு, பளிச்சென்ற உச்சரிப்பு, புத்தக வெளியீடு இவைகளுக்கு புதபலமே காரணம். புதன் வாக்குஸ்தானத்தில்- 2 ஆம் இடத்தில் ஆட்சி உச்சம் பெற்றால் சிறந்த பேச்சுதன்மை இருக்கும்.

குருபகவான்

குருவருள் திருவருள் என்பார்கள். குருபகவான் என்று சிறப்பித்து கூறப்படும் குருபார்க்க கோடி நன்மை. குருபார்வை அதாவது வியாழ நோக்கம் வந்தால் திருமணம் மற்றும் சுபகாரியங்கள் செய்யலாம் என்ற வழக்கம் உள்ளது. சுபகிரக வரிசையில் முதன்மையாக பேசபடும் குருபகவான் ஆட்சி வீடுகள் மீனம், தனுசு. உச்ச வீடு கடகம், நீச வீடு மகரம்.

குருபகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சூரியனோடு இனைந்நு 6,8,12 வது இடங்களில் மறைவு பெறாமல் அமைந்தால் ராஜயோகம். கோடிஸ்வர யோகம் அமையும். மேதைகளையும்> ஞானிகளையும் உருவாக்குவது குருபகவான். பிரகஸ்பதி என்று குருகிரகத்தை அழைப்பார்கள் இதன் பொருள் ஞானத்தலைவன் என்பதாகும்.

விவேகத்தையும், அந்தஸ்தையும், ஆற்றலையும், புத்திர பாக்கியத்தையும் வாரி வழங்குவார். பஞ்ச பூதங்களில் ஆகாயம் குருபகவான். கன்னி லக்னமாக அமைந்து, குரு 3ல் அமர்ந்து பாவகிரகங்கள் பார்த்தாலோ- சேர்ந்தாலோ இரண்டு மனைவிகள் அமையும்.

குருபகவான் ஜாதகங்களில் சிறப்பாக அமைந்தால் நல்ல குடும்பம், நல்ல கணவன்,மனைவி, செல்வசெழிப்பு அனைத்தும் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறலாம். தெய்வ அருள் கிடைக்கும். ஜோதிட ஞானத்தை குரு வழங்குவார். அறிவு வாயந்த குழந்தைகளை பெறுவதும் குருபகவான் அருள்தான்.

சுக்கிரன்

கலைக்கு காரகன் சுக்கிரன். பரணி, பூரம், பூராடம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன். ரிஷபம், துலாம் ஆட்சி வீடுகள், மீனம் உச்ச வீடு, கன்னி நீச வீடு.சுக்கிரன் சந்திரனுடன் கூடி பலமுடன் 10ல் இருந்தால் நடிப்புகலையில் தேர்ச்சிபெற்று, குறிப்பிட்ட ஜாதகர் அல்லது ஜாதகி நட்சத்திர ஸ்தானம் பெற்று அவ்வகையில் அதிர்ஷ்டசாலியாக திகழ முடியும்.

லக்னம் எதுவானாலும் சரி சுக்கிரன் 10வது வீட்டில் தனித்திருப்பாரானல் நிச்சயமாக கலைத்துறை ஓன்றில் பாண்டித்யம் பெற்று அதனால் மற்றோரை பரவசபடுத்துகின்ற ஆற்றல் அமைந்து அவ்வகையில் அதிர்ஷ்டம் பெற முடியும்.

பொருட்களை வாங்குவதும், விற்பதும் இன்றைய வாழ்வியலில் முக்கியமான தொழில் ஆகும். இந்த தொழில் வளமையை ஏற்படுத்துவார் சுக்கிரன். சுக்கிரன் பலம் பெற்று இருந்தால் காதலில் வெற்றிகிடைக்கும். ஓருவரது ஜாதகத்தில் சுக்கிரன் தசாகாலம் நடக்கும் போது நல்லமுறையில் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய சிற்றின்ப, பேறின்பங்களுக்கு வழிவகுப்பார்.

குறிப்பிட்ட ஓரு நபரை பார்த்து இவர் ஜென்டில்மேன் என்று சொன்னால் அவர் ஜாதகத்தில் சுக்கிரன் சிறப்பாக அமைந்துள்ளார் என்று அர்த்தம். லக்னத்திற்க்கு 4ல் ஆட்சி, உச்சம், நட்புப்பெற்று அமர்ந்தால் வண்டி, வாகனம், செல்வாக்கு, அந்தஸ்து ஆகியவை அற்புதமாக அமையும

சனிபகவான்

மகர ராசிக்கும், கும்ப ராசிக்கும் அதிபதி. அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சந்திரங்களுக்கு நாயாகன். துலாம், சனிபகவானுக்கு உச்ச வீடு. மேஷம் நீசம், நீசம் பெற்ற சனிபகவான் நன்மை தரமாட்டார். உச்சம் பெற்ற சனிபகவான் நன்மைகளை வாரி வழங்குவார்.

சனிபகவான் பார்வை கொடியது. சனிபகவானுக்கு சுபகிரகங்கள் பார்வை நன்மை செய்யும் இடமான 3,6,10,15,9 அகிய இடங்களில் இருந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை.

நீண்ட கால வாழ்வுக்கும், மரணத்திற்க்கும் காரகன் சனிபகவான். வாகனம் காகம். கலி,காரி,முடவன் என்ற பல பெயர்கள் உண்டு.

ஓருவர் ஜாதகத்தில் சனி நீசம் பெற்று வக்கிரம் பெறாமல் பலம் இழந்த நிலையில் இருந்தால் வாத நோயை ஏற்படுத்தும். சனிபகவான் பலம் பெற்ற ஜாதகர் சர்வ சக்திகளையும் பெறவாய்ப்பு உண்டு.

ஜாதகத்தில் நல்ல நிலையில் சனி இருந்தால், அந்த ஜாதகர் ஓரு நாட்டுக்கே தலைவராகவும் வாய்ப்பு உண்டு. வறுமை, நோய், கலகம், அவமரியாதை, இரும்பு, எண்னை, கருமைநிறம், பெரிய இயந்திர தொழிற்சாலை, தொழிலாளர் வர்க்கம் இவைகளுக்கு காரகன். சனிபகவான் பலம் பெற்று அமைந்தால் ஜாதகருக்கு அவர் சம்மந்தபட்ட இனங்களில் பொன்னையும், பொருளையும் வாரி வழங்குவார்.

இராகு

சதயம், சுவாதி, திருவாதிரை இம்மூனறு நட்சத்திரங்களும் இராகு பகவானுக்கு உரியது. இவருக்கு சொந்த வீடுகள் கிடையாது. உச்ச வீடு விருச்சிகம், நீச வீடு ரிஷபம். எந்த நட்ச்த்திரத்தில் அல்லது வீட்டில் அமர்கிறாரோ அந்த அந்த பலன்களை வழங்குவார். இராகுவை போல கொடுப்பவன் இல்லை என்பது ஜோதிட பலமொழி.

சனியை போல ராகுவும் பலன்களை தருவார். வெளிநாடு. வெளிபாஷை, வெளிமனிதர்கள், வேறு மதம் சார்ந்தவர்களோடு நட்பு-அதன் மூலம் நன்மை இவைகளை வழங்குவார் இராகு. 7-வது, 8-வது வீட்டில்,இராகு இருந்தால் சங்கடங்களை கொடுப்பார்.

இராகு சர்ப தோஷம், கால சர்ப தோஷம் முதலியன ஏற்படும். இராகு பலம் பெற்று ஓருவர் ஜாதகத்தில் இருந்தால்- ஸ்பெகுலேஷன்-லாட்டரி, பந்தயம் மூலமாக ஓரு மனிதரை கோடிஸ்வரர் ஆக்குவார்.

பலமிழந்த இராகு- ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், கள்ள வழியில் நடத்தல் ஆகியவைகளுக்கு காரணங்களாக அமையும். அரசாங்கத்தில் பதவி-புகழ் பெறுவதற்கு, எதிரிகள் அஞ்சி நடப்பதற்க்கு இராகு பலமே காரணம்.

இராகு லக்ன கேந்திரம் அல்லது திரிகோண ஸ்தானமான 5,9 ல் இருந்தால் சிறப்பு பலன்கள் தருவார். 6,12 ல் இருந்தாலும் வெற்றி கிடைக்கும்.

கேது

இவருக்கு ஞானகாரகன் என்று பெயர். வேதாந்த அறிவு நுட்பங்களுக்கும், மோட்சத்திற்க்கும், எந்த ஓரு பிரச்சனையிலிருந்து விமோச்சனம் பெறுவதற்க்கும் காரகத்துவம் உள்ளது கேது.

எளிமை, கடுமை இரண்டுக்கும் உடையதும், உலக பந்தங்களில் இருந்து விடுபட வைப்பதும் கேதுவே. வியாதியில் இருந்து நிவாரணம் தருவதும், பகைவரை முறியடிக்க செய்வதும் கேது. கோபத்தில் நடைபெறும் தவறுகளுக்கும் கேதுவே காரணம். கேதுவைப்போல கெடுப்பவன் இல்லை என்பது ஜோதிட பழமொழி.

விபத்துகளையும். தாகாத சகவாசத்தையும் வழங்குவதும் கேதுவே.ரிஷபத்தில் நீசம், விருச்சிகத்தில் உச்சம். பஞ்ச பூதங்களில் ஜலம். கேது ஞானமாரக்கத்தில் ஆன்மீகத்தை வழங்குபவர்.

3:11 PM

கிரகங்களின் அமர்வு பலன்கள்

கிரகங்களின் பலன்கள்


 பலன்கள் லக்கினம்
1
மேஷ லக்கினம்

யோககாரகர்கள்: குரு, சூரியன்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி,
**** குரு தீய கிரகங்களுடன் கூட்டாக இருந்தால் இந்த லக்கினக்காரர்
களுக்குத் தீய பலன்களையே கொடுப்பார். அவர் இந்த லக்கினக்காரர்
களுக்கு 12ஆம் இடத்து அதிபதியும் ஆவார். அதை மனதில் கொள்க!
சனியுடன் குரு சேரந்தால் அது விதிவிலக்கு. இருவரும் 9, 11ஆம்
இடத்திற்கு உரியவர்கள் ஆகவே தீமைகளில் இருந்து விலக்கு
அதையும் மனதில் கொள்க!
மாரக அதிபதி: (killer) சுக்கிரன்
==================================================
2
ரிஷப லக்கினம்

யோககாரகர்கள்: சூரியன், சனி
யோகமில்லாதவர்கள்: குரு, சந்திரன்
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:புதன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சூரியன், சனி ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) குரு, சந்திரன்
==================================================
3
மிதுன லக்கினம்

யோககாரகர்கள்: சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சூரியன், செவ்வாய், குரு
நல்ல பலன்களைக் கொடுப்பவர்: சனி, குரு
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்:சனியுடன் குரு ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) சந்திரன், சனி
====================================================
4.
கடக லக்கினம்

யோககாரகர்கள்: குரு, செவ்வாய், சந்திரன்
யோகமில்லாதவர்கள்: சுக்கிரன், பதன்
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:குரு, செவ்வாய், சந்திரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: செவ்வாய் கேந்திர திரிகோணங்களில்
இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜ யோகம்
மாரக அதிபதி: (killer) சனி
=======================================================
5
சிம்ம லக்கினம்

யோககாரகர்கள்: சூரியன், குரு, செவ்வாய்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி
நல்ல பலன்கள்: சந்திரன் சேர்க்கையை வைத்து நல்ல பலன்களைக் கொடுப்பார்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்: செவ்வாய் லக்கினத்தில்
இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜ யோகம்
மாரக அதிபதி: (killer) சனி
=======================================================
6
கன்னி லக்கினம்:

யோககாரகர்கள்: சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: செவ்வாய், சந்திரன், குரு
மாரக அதிபதி: (killer) செவ்வாய்
=======================================================
7.
துலா லக்கினம்

யோககாரகர்கள்: சனி, புதன்
யோகமில்லாதவர்கள்: சூரியன், செவ்வாய், குரு
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:சுக்கிரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: புதனும், சந்திரனும் ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) செவ்வாய்
========================================================
8
விருச்சிக லக்கினம்

யோககாரகர்கள்: குரு, சந்திரன்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சூரியன் மற்றும் சந்திரன் இருவரும்
சேர்ந்து, கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) குரு (Jupiter if illrelated will become a Maraka)
========================================================
9
தனுசு லக்கினம்:

யோககாரகர்கள்: புதன், செவ்வாய், சூரியன்
யோகமில்லாதவன்: சுக்கிரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: புதனும், சூரியனும் ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) சனீஷ்வரன்.
========================================================
10
மகர லக்கினம்:

யோககாரகர்கள்: புதன், சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சந்திரன், குரு, செவ்வாய்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சனியும், சுக்கிரனும் சேர்ந்தால் அது
இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) செவ்வாய்
========================================================
11
கும்ப லக்கினம்

யோககாரகர்கள்:சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சந்திரன், குரு, செவ்வாய்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சனியும், சுக்கிரனும் சேர்ந்தால் அது
இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) குரு, செவ்வாய்
======================================================
12
மீன லக்கினம்.

யோககாரகர்கள்: செவ்வாய், குரு
யோகமில்லாதவர்கள்: சனி, சுக்கிரன், சூரியன், புதன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை
மாரக அதிபதி: (killer) சனி, புதன்
_______________________________________________________________________________


குரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்
நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும் புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன் ஆவார்.

குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல, குரு நிற்கும் இடம் பாழ், பார்க்கும் இடம் கோடி புண்ணியம் ஆகும். குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்வார். பொதுவாக எவ்வளவு தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் தோஷம் விலகி விடும்.

கோட்சார ரீதியாக ஒரு ராசியில் 1 வருடம் தங்கும் குரு பகவான் ஜென்ம ராசிக்கு, 2, 5, 7, 11 ஆகிய பாவங்களில் சஞ்சரிக்கும் போது நற்பலனை வழங்குவார். குரு தனுசு மீனத்தில் ஆட்சியும், கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுவார். குருவிற்கு சூரியன், சந்திரன் செவ்வாய் நண்பர்கள், புதன் சுக்கிரன் பகைவர். சனி,ராகு, கேது சமம். பல்வேறு நற்பலனை வழங்கும் யோகங்கள் குரு கிரக சேர்க்கை போது உண்டாக்குவார்.

ஜென்மத்தில் குரு
குரு ஜென்ம லக்கினத்தில் இருந்தால் நல்ல உடல் அமைப்பு, நல்ல பழக்க வழக்கம், சிறப்பான பேச்சாற்றல், பரந்த மனப்பான்மை, நீண்ட ஆயுள், சிறப்பான நட்புக்கள், பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும். குரு பலம் இழந்து இருந்தாலும் பாவிகள் சேர்க்கை பெற்றாலும் உடல் நிலை பாதிப்பு, தேவையற்ற இடையூறு உண்டாகும்.

குரு 2ல் இருந்தால்
தன ஸ்தானமான 2ல் குரு சுபர் சேர்க்கையும் இருந்தால் தாராள தன வரவு, நல்ல பேச்சு ஆற்றல், வசதி, வாய்ப்பு, குடும்ப வாழ்வில் ஒற்றுமை,நல்ல கண் பார்வை உண்டாகும். குரு தனித்து இருந்தால் பொருளாதார ரீதியாக சில சங்கடம் உண்டாகும். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ, பலம் இழந்தோ இருந்தால் பண கஷ்டம், குடும்ப வாழ்வில் பிரச்சனை உண்டாகும்.

குரு 3ல் இருந்தால்
குரு 3ல் இருந்தால் எடுக்கும் முயற்சியில் அனுகூலம், எதிலும் தனித்து செயல்படும் நிலை ஏற்றம் உயர்வு உண்டாகும். தனித்து குரு இருந்தால் இளைய சகோதர தோஷம் ஆகும். ஆண் கிரக சேர்க்கை உடன் இருந்தால் சேர்க்கை உடன் பிறப்பில் அனுகூலம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சகோதர தோஷம் ஏற்படும்.

குரு 4ல் இருந்தால்
கேந்திர ஸ்தானமான 4ல் குரு இருந்தால் வசதி வாய்ப்பு, செல்வம், செல்வாக்கு, அசையா சொத்து யோகம், நல்ல பழக்க வழக்கம், நல்ல கல்வி ஆற்றல், சுக வாழ்வு உண்டாகும். தனித்து இல்லாமல் கிரக சேர்க்கையுடன் இருப்பது மிகவும் நல்லது. தனித்து பலம் இழந்தால் சுக வாழ்வு பாதிப்பு, அசையா சொத்து அமைய தடை உண்டாகும்.

குரு 5ல் இருந்தால்
5ல் குரு இருந்தால் நல்ல அறிவாற்றல், பரந்த மனப்பான்மை, பொது காரியம், சமூக நல பணியில் ஈடுபாடு, சிறப்பான குடும்ப வாழ்வு, பெரியோர் ஆசி உண்டாகும். தனித்து இருந்தால் புத்திர தோஷம் ஆகும். சுப கிரக சேர்க்கையுடன் இருந்தால் சிறப்பான புத்திர பாக்கியம் வசதி வாய்ப்பு உண்டாகும்.

குரு 6ல் இருந்தால்
குரு 6ல் இருந்தால் எதிரிகளை வெல்லும் அமைப்பு, நல்ல ஆரோக்கியம், சிறப்பான குடும்ப வாழ்வு, பொருளாதார ரீதியாக அனுகூலம் உண்டாகும். குரு பலம் இழந்தால் வயிறு கோளாறு, பெரியவர்கள் சாபத்தால் வாழ்வில் மன குறை உண்டாகும்.
குரு 7ல் இருந்தால்
குரு ஜென்ம லக்கினத்திற்கு 7ல் இருந்தால் சுபர் சேர்க்கை மற்றும் சுபர் பார்வையுடன் இருந்தால் மன வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும். நல்ல அழகான மனைவி, சிறப்பான குடும்ப வாழ்வு, வசதியான பெண் மனைவியாக வரும் யோகம் உண்டாகும். 7ல் தனித்து இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் (கேந்திராதிபதி தோஷம்) தோஷத்தை உண்டாக்கும் பாவிகள் சேர்க்கை பெற்றால் மண வாழ்வில் பிரச்சனை உண்டாகும்.

8ல் இருந்தால்
குரு பகவான் 8ல் பலமாக இருந்தால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், திடீர் தன சேர்க்கை இருக்கும் இடத்தில் நல்ல பெயர் இறுதி நாட்கள் அமைதியாக இருக்கும் நிலை உண்டாகும். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ, பலம் இழந்தோ இருந்தால் நோய், உடம்பு பாதிப்பு, சாபத்தால் மன அமைதி இல்லாத நிலை உண்டாகும்.

9ல் இருந்தால்
குரு பகவான் 9ல் இருந்தால் தாராள தன சேர்க்கை, பூர்வீகத்தால் அனுகூலம், பெற்றோர் மூலம் அனுகூலம், தந்தைக்கு நீண்ட ஆயுள், பொது பணி, தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நல்ல பழக்க வழக்கம், பெரியோர்கள் ஆசி உண்டாகும்.

10ல் இருந்தால்
குரு பகவான் 10ம் வீட்டில் இருந்தால் உயர் பதவிகளை வகிக்கும் அமைப்பு பண நடமாட்டம் கொடுக்கல் வாங்கல் தொடர்புள்ள தொழில், அல்லது துறைகளில் பணிபுரியும் அமைப்பு, நேர்மையான வழியில் செல்லும் நிலை, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கிரக சேர்க்கையுடன் பலம் இழக்காமல் இருப்பது நல்லது. தனித்து இருந்தால் நிறைய தடைகள் உண்டு.

11ல் இருந்தால்
குரு 11ல் இருந்தால் தாராள தன வரவு, நல்ல அறிவாற்றல், வசதி வாய்ப்பு, உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் சமுதாயத்தில் பெயர் புகழ் கௌரவம் உண்டாகும். புத்திர வழியில் அனுகூலம், சிறப்பான குடும்ப வாழ்வு, திடீர் அதிர்ஷ்டம், ஸ்பெகுலேஷன் மூலம் ஏற்றம் ஏற்படும்.

குரு 12ல் இருந்தால்
குரு 12ல் இருந்தால் பண வரவில் இடையூறு, வீண் செலவுகள், சுப காரியங்களுக்கு செலவு செய்யும் நிலை உண்டாகும். குரு 6, 8க்கு அதிபதியாக இருந்து 12ல் இருந்தால் நற்பலனை உண்டாக்குவார். 12ல் குரு சுபர் பார்வை உடன் இருந்தால் நல்ல உறக்கம் நிம்மதியான இல்லற வாழ்வு, சுப செலவு, சிறப்பான கண் பார்வை உண்டாகும்.
_________________________________________________________________________

ஜென்ம லக்கினத்திற்கு 12 பாவங்களில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்

ஜென்ம லக்கினத்தில்
சுக்கிரன் ஜென்ம லக்கினத்தில் இருந்தால் அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு, நல்ல உடல் அமைப்பு, தைரியம் துணிவு, சுக போக வாழ்வு, நல்ல குடும்பம், ஆடை, ஆபரண சேர்க்கை, உண்டாகும். சுக்கிரன் பலம் இழந்தால் நல்லது அல்ல.

2ல் இருந்தால்
சுக்கிரன் ஜென்ம லக்னத்திற்கு 2ல் இருந்தால் வசதி வாய்ப்பு, நல்ல குடும்பம் அழகான கண்கள், பொன் பொருள் சேர்க்கை சுக வாழ்வு சொகுசு வாழ்வு உண்டாகும். கவர்ச்சியான பேச்சால் மற்றவர்களைக் கவரும் நிலை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் கண்களில் பாதிப்பு, தவறான பெண் தொடர்பு தீய பழக்க வழக்கம் உண்டாகும்.

3ல் சுக்கிரன்
சுக்கிரன் 3ல் இருந்தால் எடுக்கம் முயற்சியில் அனுகூலம், கலை, இசை ஆர்வம், வசதி வாய்ப்பு உண்டாகும். குறிப்பாக இளைய உடன் பிறப்பு ஸ்தானம் என்பதால் இளைய சகோதரி பிறப்பு உண்டாகும். சந்திரன் சேர்க்கை பெற்றால் கலை, இசைத்துறையில் சாதனை செய்ய நேரிடும்.

சுக்கிரன் 4ல்
சுக்கிரன் 4ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், கல்வி, அசையும் அசையா சொத்து, சுக வாழ்வு, சொகுசு வாழ்வு தாராள தன வரவு உண்டாகும். பொதுவாக சுபர் பார்வையும் இருந்தால் வாழ்வில் ஏற்றம் தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். பெண்ணுக்கு 4ம் வீடு கற்பு ஸ்தானம் என்பதால் பாவிகள் சேர்க்கை பெற்றால் கற்பு நெறி தவறிய பெண்ணாக இருப்பாள்.

5ம் வீடு
சுக்கிரன் 5ல் இருந்தால் வசதி வாய்ப்பு, பூர்வீக சொத்து, கல்வியில் மேன்மை, மகிழ்ச்சியான மண வாழ்வு, பெண் குழந்தை யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம் உண்டாகும்.

6ல் இருந்தால்
சுக்கிரன் 6ல் இருந்தால் உறவினர்களால் அனுகூலம், தேவையற்ற செலவுகள், வீண் செலவுகள், திருமணம் காலதாமதமாக நடக்கும் நிலை, சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும். பலம் இழந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் திருமண வாழ்வில் பிரச்சனை, கண் களில் பாதிப்பு, பெண்கள் வழியில் எதிர்ப்பு, ரகசிய நோய்கள் உண்டாகும்.

7ல் இருந்தால்
சுக்கிரன் சுப பார்வையும் கிரக சேர்க்கை இல்லாமல் இருந்தால் மண வாழ்வில் மகிழ்ச்சி, சந்தோஷம் வசதி, வாய்ப்பு ஏற்படும். கிரக சேர்க்கை பெற்றால் எத்தனை கிரகமோ அத்தனை தாரம். சுபர் சேர்க்கை நல்லது. பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம், பலம் இழந்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளும் பிரிவு உண்டாகும்.

8ல் இருந்தால்
சுக்கிரன் 8ல் இருந்தால் சுக வாழ்வு பாதிக்கும், தாமத திருமணம், வீடு, வாகனம் அமையத் தடை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ சூரியன் இருந்தால் ரகசிய நோய், உடல் உறவில் ஈடுபட முடியாத நிலை, கண்களில் நோய் உண்டாகும்.

9ல் இருந்தால்
சுக்கிரன் 9ல் சுபர் கிரக பார்வை மற்றும் சேர்க்கையுடன் இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு, வசதி, வாய்ப்பு பூர்வீகத்தால் அனுகூலம், மனைவி மூலம் சொத்துக்கள் சேரும் யோகம், சந்தோஷமான குடுமுப வாழ்வு, பொதுக் காரியங்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் நற்பெயர் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடு யோகம், பெண் சேர்க்கை உண்டாகும்.

10ல் இருந்தால்
சுக்கிரன் 10ல் இருந்தால் கலை, இசை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் லாபம், பெண் தொடர்புள்ள தொழில் உத்தியோகம் மூலம் உயர்வு உண்டாகும். ஆடை, ஆபரணம், வண்டி வாகனம் மூலம் நற்பலன் உண்டாகும். சிலர் மனைவியுடன் கூட்டு தொழில் செய்யும் யோகம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சில தவறான செயல்களில் ஈடுபட நேரிடும்.

11ல் இருந்தால்
சுக்கிரன் 11ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், வசதி, வாய்ப்பு, எதிர்பாராத தன சேர்க்கை அசையும், அசையா சொத்து சேர்க்கை, உடன் பிறப்பு மூலம் அனுகூலம், பெண், மூத்த உடன் பிறப்பு யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் நிறைய பெண் தொடர்பு, தவறான வழியில் சம்பாதிக்கும் நிலை உண்டாகும். பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பு உண்டாகும்.

12ல் இருந்தால்
சுக்கிரன் சுபர் பார்வை மற்றும் சேர்க்கை உடன் 12ல் இருந்தால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, உடல் உறவில் எல்லை இல்லாத மகிழ்ச்சி சுகத்திற்காக நிறைய செலவு செய்ய நேரிடும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பால் இழப்பு, தீய பழக்க வழக்கம், ரகசிய நோய்கள் கண்களில் பாதிப்பு, வீண் விரயம், ஏழ்மை ஏற்படும்.

___________________________________________________________________________


1ல் அதாவது லக்கினத்தில் சனி

லக்கினத்தில் சனி இருப்பது பொதுவாக நல்லதல்ல. துரதிர்ஷ்டம் எனலாம்.
ஜாதகனின் உடல் நலத்திற்குக் கேடு. குழந்தைப் பருவத்தில் ஜாதகனுக்கு
உடல் நலமின்மை இருந்திருக்கும். சோம்பேறித்தனத்தை உண்டாக்கும்

வித்தியாசமான பழக்க வழக்கங்களை உடையவர்
குறுகிய மனப்பன்மை உடையவர்; நெறிமுறைகள் தவறியவர்
நலமில்லாத சிந்தனை உடையவர்: கொடுர சிந்தனைகளை உடையவர்
சமூகத்தோடு ஒத்துப்போகாதவர்
கடின மனதை உடையவர்.
தந்திரமானவர்
கஞ்சத்தனம் மிக்கவர்
சுத்தமில்லாதவர்
குறுகுறுப்பானவர்
உடற்குறைபாடுடையவர்
கீழ்த்தரமான பெண்களின் சகவாசம் உடையவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-----------------------------------------------------------------------------------------------
2ல்
Saturn in the Second House
Saturn makes one not above want and prone to lying.
Will live in foreign lands.
Will be a lover of justice.
ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம்
அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணின் சகவாசம்
பிரபலமில்லாமை
தடைப்பட்ட கல்வி
கண்பார்வைக் குறைபாடு
சமூக அமைப்பிற்கு ஒத்துப்போகாதவர்
அதிரடியாகப் பேசுபவர்
சிலருக்கு திக்கிப் பேசும் குறைபாடு இருக்கும்
போதைப்பழக்கம், குறிப்பாகக் குடிப்பழக்கம் உடையவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-----------------------------------------------------------------------------------------------
3ல்
++++Saturn in the Third House
Saturn in the 3rd makes one very intelligent & liberal minded.
Will have strength of character and will be adventurous.
Will have subordinates and all the comforts of life.
துணிச்சல் மிக்கவர்
தைரியம் மிக்கவர்
விநோத மனப்பான்மையுடையவர் (எக்சென்ட்ரிக்)
புத்திசாலித்தனம் மிக்கவர்
செல்வந்தர்
சாதனைகள் படைப்பவர்
சிலர் தங்களது சகோதரர்களைப் பறி கொடுக்க நேரிடும்
அடுத்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கக் கூடியவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
--------------------------------------------------------------------------------------------------
4ல்
Saturn in the Fourth House
Affliction to the heart.
Will lack happiness and mental peace.
Will be crooked and will be a violator of social norms.
Will live in foreign lands.
மகிழ்ச்சி இல்லாதவர்
திடீர் இழப்புக்களை உடையவர்
குறுகிய மனப்பான்மை உடையவர்
நல்ல சிந்தனையாளர்
அரசியல் ஆதாயம் இல்லாதவர்
சிலருக்கு தடைகளை உடைய கல்வி அமையும்
இந்த அமைப்பினர் வெளிநாடுகளுக்குச் சென்றால் வெற்றி பெறுவார்கள்
தாய்க்குக் கண்டம்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
---------------------------------------------------------------------------------------------------
5ல்
Saturn in the Fifth House
Will lack happiness and pleasure from children if Saturn is in the fifth.
Will lack intelligence and will be fickle minded.
Will have high longevity.
குறுகிய மனதை உடையவர்
சகஜமாகப் பழகாதவர்
சிலருக்குக் குழந்தைகள் இருக்காது
விநோதமான கண்ணோட்டங்களை உடையவர்
எல்லாவற்றிற்கும் ஒரு கதை சொல்பவர்
அரசுக்கு எதிராக நடப்பவர்
பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கையை உடையவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-----------------------------------------------------------------------------------------------------
6ல்
Saturn in the Sixth House
Saturn in the sixth is the destroyer of enemies.
Will love all the pleasures of the mundane.
Will be a voracious eater.
Wealth will grace the native in no uncertain measure.
பிடிவாதமான ஆசாமி
ஆரோக்கியம் இல்லாதவர்
சிலருக்குக் காது கேட்கும் குறைபாடுகள் இருக்கும்
வாக்குவாதம் செய்பவர்கள்
சிலருக்குப் பால்வினை நோய்கள் இருக்கும்
புத்திசாலி
சுறுசுறுப்பானவர்
சிலருக்குக் கடன் தொல்லைகள் இருக்கும்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
----------------------------------------------------------------------

7ல்
++++ஜாதகன் அரசனைப்போல வாழ்வான். இந்த இடம் சனிக்கு மிகவும்
உகந்த இடம். அதானல்தான் அந்தப்பலனை அவர் ஜாதகனுக்குக்
கொடுப்பார். அதே நேரத்தில் ஜாதகனுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும்
இல்லாமல் செய்துவிடுவார்.
அரசன் என்றாலே அது இரண்டும் போய்விடுமல்லவா?

அதோடு ஜாதகனை சோம்பேறியாக்கிவிடுவார்.
சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி! டபுள் இஞ்சின்.
ஜாலியான ஆசாமி.
சிலருக்கு ஆரோக்கியம் மிஸ்ஸாகிவிடும்
சிலருக்குக் காதுக்கோளாறுகள் இருக்கும்
(இரண்டு மனைவிகள் எனும்போது காதுக்கோளாறு இருப்பது நல்லதுதான்.
அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளூம்போது தேமே என்று
ஒன்றும் கேட்காதவர்போல இருந்து விடலாம்)
நளினமானவர்
மன உறுதியானவர் (இல்லாவிட்டால் இரண்டு பெண்களைச் சமாளிக்க முடியுமா?)
ஆர்வமுள்ளவர்
அரசியலுக்குப் போனால் வெற்றிபெறுவார்.
சிலருக்கு வெளிநாட்டு விருதுகள் கிடைக்கும்
-----------------------------------------------------------------------
8ல்
இது சனிக்கு உகந்த இடம் அல்ல! ஜாதகனுக்கு அடிக்கடி நோய் நொடிகள்
உண்டாகும், ஜாதகனை நேர்மை தவறச் செய்யும். துன்பங்கள் நிறைந்திருக்கும்.
சிலரை உறவினர்கள் கைவிட்டுவிடுவார்கள்

ஏமாற்றங்கள் மிகுந்த வாழ்க்கை
குடிப்பழக்கம் இருக்கும்.
பிறவர்க்கப் பெண்களுடன் தொடர்பு இருக்கும்
கண் பார்வைக் கோளாறு இருக்கும்.
தவறான உடல் உறவுகளில் ஈடுபாடு உண்டாகும்
ஆஸ்த்மா போன்ற நோய்கள் இருக்கும்
சனியுடன் மற்றும் ஒரு தீய கிரகம் இந்த இடத்தில் கைகோர்த்தால்
ஜாதகன் நேர்மையற்றவனாக இருப்பான்,
விசுவாசம் இல்லாத குழந்தைகளுக்குத் தகப்பனாக இருப்பான்.
கொடூரமான சிந்தனைகள் உடையவன்
நீண்ட ஆயுளை உடையவன்

(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-------------------------------------------------------------------------
9ல்
ஜாதகன் தான் எனும் அகங்காராம் மிக்கவன். ஈகோவினால் பல பிரச்சினைகளைச்
சந்திக்க நேரிடும். அதிக செல்வம் சேராது. சிலருக்குத் தந்தையின் அன்பு மற்றும்
அரவணைப்புக் கிடைக்காது. பாவச் செயல்களைச் செய்ய நேரிடும்.
சிலர் மற்றவர்களின் துன்பத்தில் மகிழ்ச்சி கொள்பவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்களைப் போட்டுப் பார்க்கவும் செய்வார்கள்

வழக்குகளில் வெற்றி பெறுபவன். அறக்கட்டளைகளைத் தோற்றுவிப்பவன்
கருமி. இல்லற வாழ்க்கையிலும் அந்தக் கஞ்சத்தனம் இருக்கும்.
சிலருக்கு இறையுணர்வு அறவே இருக்காது.
சாமியாவது, பூதமாவது போடா என்பான்.
----------------------------------------------------------------------
10ல்
++++இது நன்மை அளிக்கும் அமைப்பு.. சிலருக்கு உபகாரச் சம்பளம்
கிடைக்கும். Saturn makes one have scholarship
புத்திசாலித்தனம் மிகுந்து இருக்கும். ஆண்மை அதிகம் உடையவர்களாக
இருப்பார்கள். வீர புருஷர்களாக இருப்பார்கள்.
சபைகளில் தலைமை ஏற்கக்கூடியவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில்
எல்லா வசதிகளும் தேடிவரும்.

ஒரே ஒரு கஷ்டம். செய்யும் தொழிலை அல்லது வேலையை அடிக்கடி
மாற்றிக்கொண்டே இருப்பார்கள்

நல்ல உழைப்பாளி
சிலர் விவசாயத்தில் ஈடுபடுவார்கள். பணம் சேரும்.
தீடீர் உயர்வு, திடீர் மன அழுத்தம் இரண்டும் இருக்கும்
-------------------------------------------------------------------------------
11ல்
+++++இதுதான் சனிக்கு மிகச் சிறந்த இடம்.
This is the best postion for Saturn.
Saturn well posited in the eleventh makes one highly determined, healthy,
wealthy and wise.
Will have royal favour.
Will be a good sculptor.
Will have a lot of subordinates.
சிலருக்கு அரசியல் ஆதாயம், வெற்றி கிடைக்கும்
சிலர் அதிகம் படித்தவர்களாக இருப்பார்கள்
சிலர் மரியாதைக்கு உரியவர்களாக இருப்பார்கள்
சிலர் பிறருக்கு அச்சத்தைக் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
சிலருக்கு ஏராளமான இடங்கள் சொத்தாக இருக்கும்
வண்டி வாகன வசதிகள் மிகுந்து இருக்கும்!
---------------------------------------------------------------------------------
12ல்
இந்த இடம் சனியின் அமர்விற்கு மோசமான இடம்
சனி நல்ல பார்வை அல்லது சுயவர்கத்தில் நல்ல பரல்களைப்
பெறவில்லையானால் ஜாதகனுக்குக் கஷ்டமோ கஷ்டம்
ஜாதகனுக்குத் தோல்விமேல் தோல்வி!
எங்கே சென்றாலும் எதைத் தொட்டாலும் தோல்விமேல் தோல்வி!
ஜாதகன் கடைசியில் பெரிய ஞானியாகிவிடுவான்.
"போனால் போகட்டும் போடா" என்று பாடுவான்

ஜாதகனுக்கு செல்வமும் இருக்காது. மகிழ்ச்சியும் இருக்காது இரண்டும்
மறுக்கப்பட்டிருக்கும். பலவிதமான நோய்கள் வந்து இம்சைப் பட வைக்கும்
Saturn makes one devoid of happiness & wealth.
Will be tormented by many an illness
ஜாதகன் வெறுத்துப்போய் இரக்கமில்லாதவன் ஆகிவிடுவான்
தனிமைப்பட்டு விடுவான்.

(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
_______________________________________________________________________________________

1. லக்கினத்தில் ராகு ஜாதகன் சோம்பல் உடையவன். அடிக்கடி நோய்வாய்ப் படக்கூடியவன். அது தலைவலியாகவும் இருக்கலாம், காய்ச்சலாகவும் இருக்கலாம். அல்லது வயிற்றுக் கோளாறுகளாகவும் இருக்கலாம். நோயின் தன்மைகளும், வந்து தாக்கும் நேரமும், காலமும் ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து மாறுபடும் ஜாதகனுக்கு தர்மசிந்தனை, மகிழ்ச்சி மற்றும் வயதான காலத்தில் தன் குழந்தை களால் மகிழ்ச்சி போன்றவை இருக்காது. சிலருக்கு சொத்து சுகம் இருக்காது. சிலருக்கு நீண்ட ஆயுள் இருக்காது. ஜாதகத்தில் எட்டாம் வீடும்,ஆயுள்காரகனும் வலுவாக இல்லையென்றால், அவர்களுடன் ராகுவும் சேர்ந்து ஜாதகனைப் இரக்க வேண்டியிருக்கும், மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகள் லக்கினமாக இருந்து அதில் ராகு இருந்தால் மேற்கூறியவற்றில் தீய பலன்கள் எதுவும் ஜாதகனுக்கு இருக்காது. காரணம் ராகுவிற்கு அவைகள் உகந்த லக்கினங்கள்!
2. ராகு 2ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்குக் குறைந்த அளவே செல்வம் இருக்கும். சிலர் கடனில் மூழ்க நேரிடும் ஜாதகன் சாதுரியம் உள்ளவன் சாமர்த்தியம் உள்ளவன். அந்த சாதுரியங்களில் சிலாருக்கு தந்திரமும் ஒளிந்திருக்கும். அடுத்தவன் கண்ணில் படாது. சட்டென்று கோபம் வரக்கூடியவன். பொதுவாகவே இரண்டில் தீய கிரகங்கள் இருந்தால் சொத்து இருக்காது. அல்லது சேராது. அப்படியே இருந்தாலும் பல காரணங்களால் கரைந்துவிடும். இங்கே இருக்கும் ராகு நிச்சயமாகக் கரைப்பான். அல்லது சொத்தைச் சேர்க்க விடமாட்டான்.
3. ராகு 3ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் மற்றவர்களைக் கவரக்கூடியவன். யாராக இருந்தாலும் சாய்த்து விடுவான். பெண்களாக இருந்தால் எளிதில் சாய்த்து விடுவான். எப்படிச் சாய்ப்பான் தன்னை பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பான் (இருக்காதா பின்னே?) தாராள மனமுடையவன். ஊதாரி. கையில் காசு வைத்துக் கொள்ள மாட்டான் உறவுகள், நண்பர்கள், கேளிக்கைகள் என்று பணத்தை வைத்துத் செலவு செய்வான். பெண்ணாக இருந்தால், நகை நட்டு, புடவை, அலங்காரச்சாதனங்கள் என்று செலவு செய்வர் இந்த அமைப்பினருக்கு நீண்ட ஆயுள் உண்டு. அதோடு குபேரயோகம் போல பணம் வரும். சொத்துக்களும் வந்து சேரும்!3ஆம் வீடு, 6ஆம் வீடு, 10ஆம் வீடு, 11ஆம் வீடு ஆகிய இடங்கள் தீய கிரகங்களுக்கு உகந்த இடங்கள் ஆகும்.
4. ராகு 4ஆம் வீட்டில் இருந்தால்: மருத்துவ ஜோதிடத்தின்படி, இது இருதயத்திற்கான இடம். இங்கே ராகு இருப்பது நல்லதல்ல. இருதய சம்பந்தப் பட்ட நோய்கள் வரும். இந்த இடம் சொத்து, சுகங்களுக்கான இடம். இங்கே அமரும் ராகு அவை இரண்டையும் இல்லாமல் செய்துவிடுவான். மகிழ்ச்சி இருக்காது. சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் நிலைக்காது. வண்டி வாகனங்கள் இருக்காது. பல ஜாதகர்களை இந்த அமைப்பு பொடி நடையாக வாழ்க்கை முழுவதும் நடக்க வைத்துவிடும். உறவினர்களிடம் ஒட்டுதல் இருக்காது. அவர்களில் பலர் விரோதிகளாகி விடுவார்கள். சிலருக்கு தன் தாயின் மீதே பிடிப்பு இருக்காது! இருக்கும் பன்னிரெண்டு இடங்களில் ராகு இங்கே அமர்வதுதான் மோசமாகப் போவிடும். சோகமாகப் போய்விடும். வாழ்க்கை முழுவதும் அவதியாகிவிடும்.
5. ராகு 5ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் சுயநலவாதி. தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பான். வெற்றிக்கு வேண்டிய அதிரடிகள் எல்லாம் இருக்காது. சற்றுக் கோப தாபம் உடையவன். உறவினர்கள் அவனைக் கழற்றிவிட்டு விடுவார்கள். அதாவது உறவினர்கள் இவனைக் கண்டால் ஒதுங்கி விடுவார்கள் சிலருக்கு குழந்தை பிறப்பது தாமதமாகும். சிலருக்கு ஒரு குழந்தை மட்டும் இருக்கும் ஜாதகத்தில் காரகன் குரு நன்றாக இல்லையெனில், இந்த அமைப்பினருக்குக் குழந்தை இருக்காது.
6. ராகு 6ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்கு வயிற்றுக் கோளாறுகள் இருக்கும். அது அவனைப் படுத்தி எடுக்கும் ஜாதகனுக்கு வளமான வாழ்க்கை அமையும். அதோடு சேர்த்து அல்லது அவனது வளமையைப் பார்த்து, பொறாமைப்படும் எதிரிகளும் இருப்பார்கள். ஜாதகன் தர்ம சிந்தனைகளை உடையவனாக இருப்பான். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் புகழ் உடையவனாக இருப்பான். சாப்பாட்டு ராமனாக இருப்பான் anything under the sun என்று எதையும் ரசித்து சாப்பிடக்கூடியவனாக இருப்பான். அவன் சாப்பிடுவதெல்லாம் மருந்து மாத்திரைகள் இன்றி தானியங்கி இயந்திரம்போல ஜீரணமாகிவிடும். வெற்றிகள் பலவற்றை அடையக்கூடியவனாக இருப்பான். அவனுடைய தொழில் ஸ்தானமும், இந்த அமைப்பும் சேர்ந்தால், சிலர் ராணுவத்தில் பணிபுரிவார்கள். அதிகாரியாக இருப்பான். ஆற்றல் நிறைந்தவனாக இருப்பான். பல நண்பர்கள், கூட்டாளிகள் புடைசூழ அரசனைப் போல வாழ்வான். நீண்ட ஆயுளைப் பெற்றவனாக இருப்பான்.
7. ராகு 7ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் ஊதாரியாக இருப்பான். பணத்தின் அருமை தெரியாமல் அதிகமாகச் செலவு செய்பவனாக இருப்பான். சிலருக்கு மகிழ்ச்சி இருக்காது. எப்போதும் உழன்று கொண்டிருப்பான். சிலருக்கு தேவையான புத்திசாலித்தனம் இருக்காது. சுதந்திரமாக இருக்க ஆசைப்படுவான் அடிக்கடி நோய்வாய்ப்படுபவனாக இருப்பான், இந்த அமைப்புள்ள சிலருக்கு, மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சிலர் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும். பெண்களால் திட்டு வாங்க நேரிடும். அதீத நோயால், உடல் சீர்கெடும். சிலருக்குப் அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும்படியான வாழ்க்கை அமையும்.
8. ராகு 8ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் அடிக்கடி துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கும் வீண் பழிச்சொல்லிற்கும் ஆளாக நேரிடும். இந்த அமைப்புள்ள சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும்.(எல்லோருக்கும் அல்ல!) சிலருக்கு வம்ச விருத்தி இல்லாமல் இருக்கும். முன் கர்ம வினை தொடர்கிறது என்று பொருள். சிலருக்கு உறவுகளும் அதிகம் இருக்காது; செல்வமும் இருக்காது. துயரங்கள் மட்டும் அதிகமாக இருக்கும். பொதுவாக இந்த அமைப்பினர் வாக்குவாதம், விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள் சமயங்களில் சாதாரணப் பேச்சுக்கூட சண்டையில் முடியும் அநேக சூழ்நிலைகளில் தோல்வியையே தழுவ வேண்டியதாக இருக்கும். வெற்றிச் செல்வி விலகிப் போய்விடுவாள். ஆண்களாக இருந்தால், சிலருக்கு மூல நோய் உண்டாகும் (Piles Complaint) பெண்களாக இருந்தால் மாதவிடாய்ப் பிரச்சினைகள் இருக்கும்.
9. ராகு 9ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் வலுவாக இருந்தால் இந்த இடத்தில் அமரும் ராகு ராஜ யோகத்தைக் கொடுப்பான். இல்லையென்றால் இல்லை! ராஜயோகம் உள்ளவர்களுக்கு, செல்வம், உறவுகள், ஆண் குழந்தைகள் என்று எல்லாம் அசத்தலாக இருக்கும் ஞானம் உள்ளவர்களையும், பெரியோர்களையும் போற்றும் தன்மையுடையவாக ஜாதகன் இருப்பான். இந்த இடத்து ராகு ஜாதகனின் தந்தைக்குக் கேடாக இருக்கும். பூர்விகச் சொத்துக்களுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும்!
10. ராகு 10ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் புகழ் பெறுவான். இயற்கையாகவே தொழில்நுட்ப அறிவு இருக்கும். சிலர் பாவச் செயல்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள். சிலர் வீரதீரச் செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள் மொத்தத்தில் வீரம், தைரியம், பாராக்கிரமம் ஆகியவைகளைக் கொண்டவனாக ஜாதகன் இருப்பான். எல்லா செளகரியங்களையும் பெற்றவனாக இருப்பான் அறிவு, அந்தஸ்து ஆகியவற்றால் மேம்பட்ட வாழ்க்கைச் சூழலில் ஜாதகனின் வாழ்க்கை அமைந்து சிறக்கும்!
11. ராகு 11ஆம் வீட்டில் இருந்தால்: பதினொன்றாம் இடத்தில் ராகு அமையப் பெற்ற ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், அதிகம் பொருள் ஈட்டுபவானகவும் இருப்பான். நீண்ட ஆயுளை உடையவனாக இருப்பான். நல்ல நண்பர்களையும், நல்ல கூட்டாளிகளையும் கொண்டவனாக இருப்பான். செய்யும் தொழிலில் அல்லது வேலையில், அனைத்து நுட்பங்களையும் தெரிந்தவனாக இருப்பான். அல்லது விரைவில் எதையும் கற்றுக்கொண்டு செயல்படுபவனாக இருப்பான். வலுவானவனாக இருப்பான். வளம் உடைய வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கும் அல்லது அமையும். அத்தனை சுகங்களையும், செளகரியங்களையும் அனுபவிப்பவனாக ஜாதகன் இருப்பான்
12. ராகு 12ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் பாவச் செயல்களைச் செய்பவனாக இருப்பான். அதையும் பிறர் அறியாத வண்ணம் செய்வான். உடல் உபாதைகளுக்கு ஆளாவான்.கண்களில் கோளாறுகள் உண்டாகலாம். சிலருக்கு, செல்வமும் ஆண் வாரிசுகளும் இல்லாமல் இருக்கும். வலுவில்லாதவன். மன, மற்றும் உடல் வலிமை இல்லாதவன். பார்க்கும் வேலை அல்லது தொழில்களில் இருந்து வீழ்ச்சி அடைய நேரிடும் இந்த இடத்து ராகு, மேலும் ஒரு தீய கிரககத்தின் (சனி, அல்லது செவ்வாயின்) சேர்க்கை பெற்றால் வீழ்ச்சி நிச்சயமாக உண்டு.
_______________________________________________________________________________

பன்னிரெண்டு வீடுகளிலும் கேது இருப்பதற்கான பலன்கள்

1ல்
லக்கினத்தில் கேது

ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். அதிர்ஷ்டம் உடையவனாக இருப்பான்.
பொதுவாக அமைதியானவன். காரியவாதி. மற்ரவர்களுக்குத் தெரியாத
விஷயங்களும் இந்த அமைப்பினருக்குத் தெரியும். உள்மன அறிவு மிக்கவர்கள்
சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் இருக்கும்

மற்றவர்களுடன் யதார்த்தமாகப் பழக மாட்டார்கள். தங்களுக்கென்று ஒரு
எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதற்குள்ளாகவே வாழ்பவர்கள்

சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், விதண்டாவாதம் செய்பவர்களாக
இருப்பார்கள். மற்றவர்களையும் வாதம் செய்யத்தூண்டும் அளவிற்குத் திறமை
மிகுந்து இருக்கும்! மகரம் அல்லது கும்ப லக்கினத்தில் கேது இருக்கும் ஜாதகன்
இதற்கு விதிவிலக்கானவன். கேதுவிற்கு அவை இரண்டும் உகந்த லக்கினங்களாகும்
-----------------------------------------------------------------------------------------
2ல்
இரண்டில் கேது!

ஜாதகன் எதையாவது பேசிக்கொண்டே இருப்பவன் (full of excessive talk)
படிப்பைப் பாதியில் விட்டவன் அல்லது படிக்காதவனாக இருப்பான்.
குறுகிய கண்ணோட்டம் உடையவனாக இருப்பான்.

குடும்ப வாழ்க்கை 32 வயதிற்கு மேல்தான் உண்டாகும்

சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், படித்தவர்களாக இருப்பார்கள்
மற்றவர்களுடைய சொத்திற்கு ஆசைப் படுபவர்களாக இருப்பார்கள்.
-------------------------------------------------------------------------------------
3ல்
மூன்றில் கேது.

ஜாதகன் உயர்ந்தகுடியில் பிறந்தவனாக இருப்பான். அதாவது உயர்ந்த குடும்பத்தில்
பிறந்தவனாக இருப்பான். தர்ம சிந்தனை மிக்கவன். தூணிச்சல் மிக்கவன்.
சாதனைகளைச் செய்யக்கூடியவன். எதிரிகளை ஒழித்துக் கட்டக்கூடியவன்.
செல்வத்தை அனுபவிக்கக் கூடியவன்.வளம் பெறக்கூடியவன். எல்லாவிதமான
சுகங்களையும் அனுபவிக்கக் கூடியவன். ஜீனியசாக (genius) இருப்பான்.
-----------------------------------------------------------------------------------
4ல்
நான்கில் கேது

இந்த இடம் கேதுவிற்கு உகந்த இடம் அல்ல. மாற்றிச் சொன்னால் ஜாதகனுக்கு
உகந்தது அல்ல!

நான்காம் வீடு இருதயத்திற்கான இடம். இங்கே கேது அமர்ந்தால் ஜாதகனுக்கு
இதய நோய்கள் (heart) வரலாம். வரும் என்று அடித்துச் சொல்லாமல், வரலாம்
என்று சொல்வதற்குக் காரணம், இந்த வீட்டில் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது
சேர்க்கை இருந்தால் வராது.

ஜாதகனுக்கு மகிழ்ச்சி, சொத்துக்கள், சொந்தங்கள், வண்டி வாகனங்கள் என்று
எல்லாம் மறுக்கப்பட்டிருக்கும். உறவுகளே பகையாக மறிவிடும்.

சிலருக்குத் தாயன்பு என்பதே இல்லாமல் போய்விடும்.
---------------------------------------------------------------------------------------
5
ஐந்தில் கேது

ஜாதகன் கடினமான ஆசாமி. மற்றவர்களுடன் ஒத்துப்போக முடியாதவனாக ஜாதகன்
இருப்பான். ஜாதகனுக்கு சந்ததி இருக்காது. இருந்தாலும் பிரச்சினைக்கு உரியதாக
இருக்கும். அஜீரணக்கோளாறுகள் இருக்கும். அதனால் மேலும் பல நோய்கள்
உண்டாகி வாட்டும். பாவச் செயல்களில் ஈடுபாடு இருக்கும். மகிழ்ச்சி இருக்காது.

இந்த அமைப்பை சந்நியாச யோகம் என்பார்கள். அதுவே சுபக்கிரகங்களின்
பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் சாம்ராஜ்யத்தை ஆளும் யோகமாக
மாறிவிடும்.
----------------------------------------------------------------------------------------
6
ஆறில் கேது

ஜாதகன் அவன் இடத்தில், அவனுடைய இனத்தில் அல்லது அவனுடைய சமூகத்தில்
தலைவனாக இருப்பான். உயர்கல்வி பெற்றிருப்பான். தர்மசிந்தனை உடையவனாக
இருப்பான். சொந்த பந்தங்களை நேசிப்பான். பல பெருமைகளுக்கு உரியவனாக
இருப்பான். பலதுறைகளிலும் அறிவு உள்ளவனாக இருப்பான். பெருந்தன்மை
உடையவனாக இருப்பான். கேதுவிற்கு இந்த இடம் மிகவும் உகந்ததாகும்.

வயிற்றுக் கோளாறுகள் (stomach disorders) உண்டாகும்

----------------------------------------------------------------------------------------
7
ஏழில் கேது

ஜாதகனுக்கு, அவனுடைய மனைவியால் மகிழ்ச்சி கிடைக்காது. நடத்தை சரியில்லாத
பெண்களுடன் ஜாதகனுக்கு நட்பு அல்லது உறவு இருக்கும். அவர்களுக்காக
ஜாதகன் உருகக்கூடியவன். வாழ்க்கையில் வளமை இருக்காது.
மன அழுத்தங்களை உடையவன்.பயணிப்பதில் ஆர்வமுள்ளவன்.
அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கக்கூடியவன்

இந்த அமைப்பை உடைய சில ஜாதகர்களுக்கு நோய்வாய்ப்பட்ட மனைவி அல்லது
கணவன் அமையக்கூடும்
------------------------------------------------------------------------------------
8
எட்டில் கேது

ஜாதகன் அதீத புத்திசாலி. மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்றக் கூடியவன்

சிலருக்கு ஆயுதங்களால் விபத்துக்கள் நேரிடும். சிலர் குறைந்த ஆண்டுகளே
உயிர் வாழ்வார்கள். பொதுவாக எட்டில் கேது இருந்தால் ஆயுள்தோஷம்

சிலருக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை மீது மையல் இருக்கும். அடுத்தவன்
சொத்தை அபகரிக்கும் ஆசை இருக்கும். சிலர் கஞ்சனாக இருப்பார்கள்.

சிலருக்குப் புகழும் தலைமை ஏற்கும் தகுதியும் இருக்கும்.
----------------------------------------------------------------------------------
9
ஒன்பதில் கேது

ஜாதகன் பல பாவச்செயல்களைச் செய்யகூடியவன், பெற்றவர்களின் அன்பு,
பாசம், பரிவு போன்றவைகள் கிடைக்காது. காம இச்சைகள் மிகுந்தவன்.

சிலர் ஆன்மிகம், மத உணர்வு, தர்ம நியாயங்கள் இவற்றை எல்லாம் உதறி
விடுவார்கள். அப்படி உயர்ந்த சிந்தனைகள் உடையவர்களைக் குறை கூறுவதில்
ஜாதகன் ஆர்வமுடையவனாக செயல்படுபவனாக ஜாதகன் இருப்பான்.

சிலர் தங்களுடைய பாவச் செயல்களினால் தாழ்ந்து போய்விடுவார்கள்
--------------------------------------------------------------------------------
10
பத்தில் கேது

மக்கள் அனைவரையும் நேசிக்கும் மனது அல்லது பக்குவம் ஜாதகனுக்கு இருக்கும்.
சமூகக் காவலனாக ஜாதகன் இருப்பான். அல்லது அந்த நிலைக்குச் ஜாதகன்
உயர்வான். He will engage himself in the act of donating money, goods, services,
time and/or effort to support a socially beneficial cause, with a defined objective
and with no financial or material reward to the donor. In a more general sense,
activity intended to promote good or improve human quality of life.

ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். வாழ்க்கை முறைகள், வாழ்க்கைத் தத்துவங்கள்
ஆகியவற்றை அறிந்தவனாக இருப்பான்.

திறமைசாலியாக இருப்பான். செய்யும் தொழிகளில் நுட்பம் அறிந்தவனாக இருப்பான்.
கேது இந்த இடத்தில் இருப்பது ஒருவனின் தொழில் மேன்மைக்கு உகந்ததாகும்.
This is the best place for professional enhancement.
---------------------------------------------------------------------------------------
11
பதினொன்றில் கேது

ஜாதகன் செல்வந்தனாக இருப்பான் அல்லது அந்த நிலைக்கு உயர்வான். அதிகம்
படித்தவனாக இருப்பான். கல்வியாளர்கள் மத்தியில் பெருமைக்கும் புகழுக்கும்
உரியவனாகத் திகள்வான். மகிழ்ச்சியில் திளைப்பான்

பல நல்ல குணாம்சங்கள் இருக்கும். பெருந்தன்மையும், நல்ல நோக்கங்களும்
உடையவனாக ஜாதகன் இருப்பான். அவன் தன்னுடைய செயல்களால் பலரிடமும்
நல்ல மதிப்பைபயும் மரியாதையையும் பெறுவான்
---------------------------------------------------------------------------------------
12
பன்னிரெண்டில் கேது

இந்த இடத்தில் கேது இருந்தால் ஜாதகனுக்கு அடுத்த பிறவி கிடையாது. வீடு
பேற்றை அடைந்து விடுவான் என்று நூல்கள் கூறுகின்றன. சரியாகத் தெரியவில்லை
பல் ஜோதிட நூல்கள் இதை வலியுறுத்திக் கூறுவதால் நம்புவோம்.

ஜாதகன் அடிக்கடி மாறக்கூடியவன். காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு
என்றிருக்கும். நிலையில்லாதவன்ஊர்சுற்றி, சிலருக்கு, கண்கள் பாதிப்பிற்குள்ளாகும்

பாவங்களைச் செய்துவிட்டு மறைக்கக் கூடியவன். துன்பங்களில் உழல்பவன்.

சிலர் மாய, ஜால வேலைகளில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்

சிலர் தனிமையை விருபுவார்கள். தனிமைப்பட்டும் வாழ்வார்கள்
---------------------------------------------------------------------------------------
லக்கினத்தில் சூரியன் இருந்தால் ஜாதகர் சுறுசுறுப்பானவர்.
செந்நிற மேனி உடையவர்.
தேகம் எப்போதும் உஷ்ணமாக இருக்கும்.

இரண்டில் சூரியன் இருந்தால் கல்வி சுமாராக இருக்கும்
நல்ல உழைப்பாளி.
ஜாதகருக்குப் பொருள் சேரும்.

மூன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் Take it easy type
அல்லது Don't care type.
பகைவர்களை என்ன சேதி என்று கேட்கும் திறமை உடையவர்

நான்கில் சூரியன் இருந்தால், ஜாதகரின் தாய்க்கு நன்மையல்ல
ஜாதகருக்கு உறவினர்களுடன் பகை உண்டாகும்.
அரசியல் செல்வாக்கு இருக்கும்

ஐந்தில் சூரியன் இருந்தால், குடும்பம் அளவாக இருக்கும்;
வாழ்க்கை வளமாக இருக்கும்.
தந்தைவழிச் சொத்துக்கள் இருக்காது
ஜாதகர் தன் முயற்சியால் உயர்வடைவார்

ஆறில் சூரியன் இருந்தால் பகைவர்கள் பக்கத்தில் வரமாட்டார்கள்
ஜாதகரின் குடும்பம் பெரியதாக இருக்கும்.

ஏழில் சூரியன் இருந்தால்
ஜாதகர் கடன், நோய்கள், பிணிகள், வழக்குகள், விவகாரங்கள் இல்லாதவர்.
பலரது பராட்டுக்க்களைப் பெறுபவர்
மனைவிக்கு அடங்கிப்போகக்கூடியவர்.
எதையும் சரிவரச் செய்யாதவர்.

எட்டில் சூரியன் இருந்தால், ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர்.
எவருக்கும் பணிந்து போகாதவர்
இரக்கமற்ற குணத்தை உடையவர்
சிலருக்குக் கண்களில் குறைபாடுகள் இருக்கும்

ஒன்பதில் இருக்கும் சூரியனால் தந்தைக்கு இடையூறுகள் ஏற்படும்
ஜாதகருக்குத் தீயவழிகளில் பொருள் சேரும்
உறவினர்களுடன் விரோதம் ஏற்படும்
சுய முற்சியால் செல்வம் சேரும்

பத்தில் சூரியன் இருந்தால் அது ஜாதகருக்கு நன்மைகளைச் செய்யும்
ஜாதகருக்கு நிரந்தத் தொழில் அல்லது வேலை இருக்கும்
அரசு தொடர்பு அல்லது அரசியல் தொடர்பு இருக்கும்
உடல் நலம் சீராக இருக்கும்
தன் அறிவினால் சுயமுன்னேற்றம் அடையக்கூடியவர்

பதினொன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர்.
பலரைவைத்து வேலைவாங்கும் திறமை உடையவர்.
நண்பர்களால் பல உதவிகள் கிடைக்கும்

பன்னிரெண்டில் சூரியன் இருந்தால்
ஜாதகருக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு இருக்காது.
அதிகமான செலவுகள் ஏற்படும்
ஜாதகர் ஊர் சுற்றி. அதிகமான பயணங்களை மேற்கொள்வார்.
சந்ததிக் குறைபாடுகள் இருக்கும்.
உழைத்து முன்னேற்றம் காண்பவர்.
==========================================
ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கும் நிலைகளுக்கான பலன்கள்!

1
லக்கினத்தில் செவ்வாய் இருந்தால்:
ஜாதகன் கோபக்காரன். எடுத்தற்கெல்லாம் சட்டென்று கோபம் வரும்!
உக்கிரமானவன். சிலருக்கு அடிக்கடி உடற் காயங்கள் ஏற்படும்.
சிலருக்கு (ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் சரியாக இல்லாவிட்டால்)
குறைந்த ஆயுளிலேயே போர்டிங் பாஸ் கொடுக்கப்பட்டுவிடும்.
ஒரு வியாதி போனால் இன்னொரு வியாதி கதைவைத் திறந்து கொண்டு
உடனே வரும்!

ஜாதகன் சலனபுத்திக் காரணாக இருப்பான். தீரனாகவுன் இருப்பான்
சிலர் வன்கன்மையாளராகவும் (cruel) இருப்பார்கள்.
---------------------------------------------------------------------------------------

2
இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
குறைந்த அளவு செல்வம் இருக்கும். கல்வியும் குறைந்த அளவே
இருக்கும். சிலர் தீயவர்களுக்கு சேவை செய்வார்கள். வாக்குவாதம்
செய்பவர்கள் (argumentative)

செவ்வாயின் இந்த அமைப்பு, கல்விக்கும், செல்வத்திற்கும் ஏற்றதல்ல!
இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால் அது செல்வத்திற்குக்
கேடானது. செல்வம் இருக்காது. அப்படியே தேடிப் பிடித்தாலும் தங்காது
அல்லது நிலைக்காது!
---------------------------------------------------------------------------------------

3
******மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
ஜாதகன் பிடிவாதக்காரன். சாதனையாளன்.செல்வச்சூழல்களை
அனுபவிக்கக்கூடியவன். புகழ் பெறுவான். எல்லா வசதிகளும்
வந்து சேரும். தனித்தன்மை வாய்ந்தவன்.நீண்ட ஆயுளை
உடையவன்.

தர்ம, நியாயங்கள், நன் நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டுச்
சிலர் வாழ்வார்கள்.
---------------------------------------------------------------------------------------

4
நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
உறவுகள், வீடு வாசல், சொத்துக்கள், தாய்ப்பாசம், வாகனவசதி
போன்றவைகள் இல்லாத அல்லது கிடைக்காத அல்லது மறுக்கப்பட்டவனாக
ஜாதகன் இருப்பான்.

இது அத்தனையும் எனக்கு இருக்கிறது என்று ஒருவர் சொன்னால் இந்த
அமைப்பின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை பட்டுக் கொண்டிருக்கும்

ஜாதகன் பெண்களின்மேல் அதீதமான ஈர்ப்பு உள்ளவன். சிலர்
பெண்களுக்காக உருகி கோதாவரி ஆறு போல ஓடக்கூடியவர்களாக
இருப்பார்கள். மனப் போராட்டங்கள் மிகுந்த ஜாதகம்.

(பெண்பித்து இருந்தால் மனப்போராட்டம் ஏன் இருக்காது?:-))))
--------------------------------------------------------------------------------------

5
ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
பெண்குழந்தைகள் மட்டுமே இருக்கும். வாழ்க்கை வசதிகள், சொத்துக்களில்
குறைபாடுகள் இருக்கும். அல்லது சொத்து, சுகம் இல்லாமல் இருக்கும்.
சிலர் மனம் வெறுக்கும் சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். தர்ம, நியாயங்கள்,
நன்நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டு வாழ நேரிடும்.

சிலர் குறுகியமனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர்
எடுத்ததெற்கெல்லாம் கோபம் கொள்ளுகின்ற குணத்தை உடையவர்களாக
இருப்பார்கள்.
-------------------------------------------------------------------------------------
6
********ஆறாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
நல்ல கட்டுமஸ்தான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பு இருக்கும்
ஜாதகன் ஊராக இருந்தாலும் சரி, போராக இருந்தாலும் சரி, எதிரிகளை
துவம்சம் செய்யக்கூடியவனாக இருப்பான்.

மனதில் பயமே இருக்காது. சிலருக்கு அதீத பெண் ஆசை இருக்கும்
அதாவது ஆதீதமான காம உணர்வுகள் இருக்கும். எப்போதும் காம
சிந்தனைகள் மேலோங்கி இருக்கும்.

சிலர் தங்கள் முயற்சியால் மேன்மை அடைவார்கள். புகழ்பெறுவார்கள்
=======================================================
7
ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
தர்ம நியாயம் இல்லாத காரியங்களைச் செய்பவான ஜாதகன் இருப்பான்.
சுபக்கிரகங்களின் பார்வை இருந்தால் அது குறையும்.

சிலருக்கு மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சண்டைபிடிக்கும்,
அல்லது சண்டை போட்டு சட்டையைப் பிடிக்கும் மனப்பான்மை இருக்கும்
அநேக நோய்கள் ஒவ்வொன்றாகத் தேடிவரும். மனையாளும் அதனால்
பாதிக்கப்படுவாள்.

சிலர் கல்மனதுக்காரர்களாக இருப்பார்கள்.
--------------------------------------------------------------------------------------
8
எட்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
உடலும், உள்ளமும் நலமாக இருக்காது. சொத்து சேராது. சுகம்
எட்டிபார்க்காது.

சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும். ஜாதகத்தில் வேறு அம்சங்கள்
நன்றாக இல்லாவிட்டால் ஜாதகன் சீக்கிரமே சிவனடி சேர்ந்து விடுவான்.
தர்ம, நியாயங்களைப் பற்றிக் கவலைப்படாத மனதைக் கொண்டிருப்பான்.
--------------------------------------------------------------------------------------

9
ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
தந்தையோடு நல்ல உறவு இருக்காது. தந்தை மேல் அன்பு பாசம்
இருக்காது. ஜாதகன் அதிரடியான ஆள். கடுமையான ஆள்

ஜாதகன் கண்களுக்குப் புலப்படாத கலைகளில் ஆர்வம் உள்ளவனாக
இருப்பான். அதில் தேர்ச்சியும் பெறுவான்.
--------------------------------------------------------------------------------------
10
*******பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
இது செவ்வாய் நமக்கு நன்மைகளை அள்ளித் தரும் இடம்.
ஜாதகன் ராஜ அந்தஸ்துடன் இருப்பான். வீரன். சூரன். வெற்றியாளன்
ஆற்றல் உடையவன்.ஆர்வம் உடையவன்.

மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ் என்று எல்லாம் கிடைக்கும்
ஜாதகன் தேடிப்பிடிப்பான்.
----------------------------------------------------------------------------------------
11
********பதினொன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ், வளம் எல்லாம் இருக்கும்
வயாக்ரா சாப்பிடமலேயே ஆண்மை உணர்வு அதிகமாக இருக்கும்
மன உறுதி இருக்கும்.(அது இருந்தால் இது இருக்காதா என்ன?)

நிறைய நண்பர்கள், கூட்டாளிகள் இருப்பார்கள். ஜாதகன் உண்மையிலேயே
தனித்தன்மை வாய்ந்தவனாக இருப்பான்.

ஜாதகன் எதையும் தெளிவாகப் பேசக்கூடியவனாக இருப்பான்
=======================================================
12
பன்னிரெண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
கண்களில் குறைபாடுகள் ஏற்படும். பயப்பட வேண்டாம். கண் நோய்கள்
ஏற்படலாம். ஜாதகன்

சோம்பல் உடையவன். சோம்பல்தான் அவனுடைய முதல் மனைவி!:-)))

பொருளாதார இழப்புக்கள் இருக்கும். பல சொத்துக்களைத் தொலைப்பான்
துன்பங்கள், துயரங்கள் என்று எல்லாமே ஜாதகனுக்கு எதிராகக் கொடிபிடிக்கும்

சிலர் படு கருமியாக இருப்பார்கள். சாப்பிடும்போது காக்காய் வந்தால்
கையைக் கழுவி விட்டு காகத்தை ஓட்டுபவர்கள் என்று வைத்துக் கொள்ளூங்கள்
===========================================================


சந்திரன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்

சந்திரன் முதல் வீட்டில் இருந்தால் லக்கினத்தில் இருப்பது நல்லது ஆனால் சந்திரனுக்கு அது சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால் நல்லது நட்பு வீடாக இருந்தாலும் நல்லது வாழ்க்கையில் உயர்வு பெறுவதற்க்கு நல்லது செய்வார். சிற்றின்ப சுகம் நன்றாக அமையும். பந்தயத்தில் வெற்றி பெறுவார் திடீர் பணவரவு இருக்கும்.

2-ல் சந்திரன் செல்வம் தருவார். நன்றாக பேச்சு வரும் அரசாங்கத்தில் நல்ல மதிப்பு இருக்கும் சொத்து சுகம் ஏற்படும். பெயரும் புகழும் உண்டாகக் காரணமாக இருப்பார். நல்ல கல்வி கிடைக்கும் சந்திரன் கெட்டால் செல்வத்தை இழக்க செய்யும். நல்ல பணவரவு இருக்காது. பொதுவாக வளர்பிறையில் நல்லது செய்வார்.

3-ல் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் உடல் வலிமையையும் ஆற்றலையும் தருவார். சகோதர சகோதரிகளை ஆதரிப்பார் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். மூன்றாவது வீடாக இருப்பதால் அடிக்கடி குறுகிய பயண செய்ய வைப்பார். வாகனம் வசதி கிடைக்கும் சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும்.

4-ல் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும் 4 ஆம் வீடு வீட்டை குறிப்பதால் ஆறு குளம் கடலோரத்தில் வீடு அமையும். நண்பர்களுக்கு உதவி செய்வார். தாய்வழிச்சொத்து கிடைக்கும் கொடை குணம் இருக்கும்.

5-ல் சந்திரன் பலம் பெற்று இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். நல்ல அறிவாற்றலை தருவார் வாழ்க்கையில் உயர்ந்த நிலைய அடையவைப்பார். குழந்தைபாக்கியம் அமையும் ஆனால் பெண் குழந்தைகளே பிறக்கும். சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும்.

6-ல் சந்திரன் இருந்தால் சுகபோக வாழ்வு வாழ்பவர். விரோதிகளை உண்டு பண்னுவார். இளம் வயதில் மகிழ்ச்சி குறையும். சந்திரன் அசுபபலன் பெற்று இருந்தால் அடுத்தவருக்கு அடங்கி நடக்கக்கூடிய தன்மையை தருவார்.

9-ல் உள்ள சந்திரன் இருந்தால் நல்ல பாக்கியசாலியாக இருப்பார். புத்திரபாக்கியம் இருக்கும். உறவினர்கள் நல்ல உதவி செய்வார்கள். செல்வம் குவியும். சங்கீதம் நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாகும். அம்மாவின் அரவணைப்பு இருக்கும்.

10-ல் உள்ள சந்திரன் தன் மதத்தின் மீது பற்று ஏற்பட்டு மதம் பிரசாரம் செய்வார். நல்ல செல்வ வளம் சந்திரன் தருவார். வாழ்க்கையில் உன்னதமான பல நல்ல காரியங்களை செய்வார். செய்தொழில்களில் பகைவர்களை வெற்றிக்கொள்ளும் தைரியத்தை தருவார்.

வாழ்க்கையில் பற்றிய எண்ணத்தை இயற்கையாக உண்டுபண்னுவார். தாய்வழியில் நல்லது செய்வார். நண்பர்களிடத்தில் நல்ல நட்பு உண்டுபண்னுவார். தொழில் நுட்பத்துறையில் ஈடுபட வைக்கும். தொழில்நுட்பத்துறையில் நல்ல அறிவு வளர செய்வார். வாழ்க்கையில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். சிலபேருக்கு அரசாங்கத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

11-ல் உள்ள சந்திரன் மூத்த சகோதர்களின் மூலம் லாபத்தை தருவார். எந்த வேலையை எடுத்தாலும் எளிதில் முடிக்க கூடிய திறமையை தருவார். நல்ல தீர்க்காயுள் ஏற்படும். வேலையாட்கள் மூலம் வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் மீது ஆர்வம் ஏற்படும். அரசாங்கத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும். நல்ல செல்வ வளம் சேரும்.

12-ல் உள்ள சந்திரன் பாதங்களில் வலி உண்டாக செய்வான். வாழ்க்கையில் மதிப்பு இழக்க செய்வான். கண் பார்வை மங்க செய்வான். அறிவாற்றல் குறையும். குறுகிய மனப்பான்மை இருக்கும். மனஉளைச்சல் இருக்கும். செலவு கூடும்.


______________________________________________________________

குருபகவான் ஜாதகத்தில் இருக்கும் இடத்தை வைத்துப் பலன்கள்:

In the first house.: Magnetic personality, good grammarian, majestic
appearance, highly educated, many children, learned, dexterous,
long-lived, respected by rulers, philologist political success, sagacious,
stout body, able, influential leader.

Second house.: Wealthy, intelligent, dignified, attractive, happy, fluent
speaker, aristocratic, tasteful, winning manners, accumulated fortune,
witty, good wife and family, eloquent, humorous, and dexterous.

Third house.: Famous, many brothers, ancestors, devoted to the family,
miserly, obliging, polite, unscrupulous, good agriculturist, thrifty, good
success, energetic, bold, taste for fine arts and literature, lived by
relatives.

Fourth house.: Good conveyances, educated, happy, intelligent, wealthy,
founder of charitable institutions, comfortable, good inheritance,
good mother, well read, contented life.

Fifth house.: Broad eyes, handsome, states manly ability good insight,
high position, intelligent, skilful in trade, obedient children, pure-hearted,
a leader.

Sixth house.: Obscure, unlucky, troubled, many cousins and grandsons,
dyspeptic, much jocularity, witty, unsuccessful, intelligent, foeless.

Seventh house.: Educated, proud, good wife and gains through her,
diplomatic ability, speculative mind, very sensitive, success in agriculture,
virtuous wife, pilgrimage to distant places.

Eighth house.: Unhappy, earnings by undignified means, obscure, long
life, mean, degraded, thrown with widows, colic pains, pretending
to be charitable, dirty habits.

Ninth house.: Charitable, many children, devoted, religious, merciful,
pure, ceremonial-minded, humanitarian principles, principled, conservative,
generous, long-lived father, benevolent, God-fearing, highly cultured,
famous, high position.

Tenth house.: Virtuous, learned, clever in acquisition of wealth,
conveyances, children, determined, highly principled, accumulated
wealth, founder of institutions, good agriculturist, non-violent,
ambitious, scrupulous.

Eleventh house.: Lover of music, very wealthy, states manly ability,
good deeds, accumulated funds, God-fearing, charitable, somewhat
dependent, influential, many friends, philanthropic.

Twelfth house.: Sadistic, poor, few children, unsteady character,
unlucky, life lascivious later life inclined to asceticism, artistic taste,
pious in after-life.

மேலே உள்ள பலன்கள் பொதுப்பலன்கள்தான். மற்ற கிரகங்களின்
சேர்க்கை ,பார்வை, அமர்ந்த பாவாதிபதியின் நிலைமை, லக்கினாதி
பதியின் நிலமை ஆகியவற்றை வைத்து மாறக்கூடியவை.

ஆகவே அலசும் போதும் அலசிப் பிழியும் போதும் இன்னும் பத்து
வாளி தண்ணீர் எடுத்துக் கொள்வது நல்லது!:-))))
=================

Thursday, November 10, 2011


12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

யோகமும் அதிர்ஷ்டமும் தரப்போகும் சனிப்பெயர்ச்சி!

கர வருடம், மார்கழி மாதம், 5-ம் தேதி புதன்கிழமை (21.12.2011) கிருஷ்ண பட்சம் ஏகாதசி திதி, சுவாதி நட்சத்திர நாளில்... சுகர்மம் நாமயோகம், பாலவம் நாமகரணம், சித்த யோகத்தில், சூரிய உதயநேரம் போக உதயாதி நாழிகை 2:17-க்கு நேத்திரம், ஜீவனும் நிறைந்த பஞ்ச பட்சியில், காகம் நடைபயிலும் நேரத்தில், புதன் ஓரையில், சரியாக காலை 6:55 மணிக்கு, கன்னி ராசியில் இருந்து தன்னுடைய உச்ச வீடான துலாம் ராசிக்குள் நுழைகிறார் சனி பகவான். ஏறக்குறைய 16.12.14 வரை, துலாம் ராசியிலேயே அமர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்துவார்.

அழகு, ஆடம்பரம், கலை, காவியம் ஆகியவற்றுக்கு சொந்தக்காரரான புதனின் வீட்டில் சனி அமர்கிறார். எனவே, மக்களிடையே எல்லா சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்; ஆடம்பர மோகம் அதிகரிக்கும். சுற்றுலாத் துறை மேம்படும். நவீன டிசைன்களில் ஆபரணங்கள் வெளியாகும். ஜவுளித் துறையில் புதுமை பிறக்கும். துணிமணிகளின் விலை குறையும். விளையாட்டு வீரர்கள், சினிமா மற்றும் சின்னத் திரை கலைஞர்கள், அரசாங்கத்தால் சில சலுகைகள் பெறுவர்.

வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, இந்தியாவில் நவீன வகை வாகனத் தயாரிப்பு தொழிற்கூடங்கள் அமையும். கிராமங்கள் அசுர வளர்ச்சி அடையும். மறுமணம் செய்வோரது எண்ணிக்கை அதிகமாகும். வேலையாட்களின் தினக் கூலியும், மாதச் சம்பளமும் உயரும். பணியாட்கள் பற்றாக்குறையாலும் வேலை நிறுத்தத்தாலும் புகழ்பெற்ற தொழிற்கூடங்கள் பாதிப்படையும். விமானம், கப்பல் மற்றும் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும். பிரபலங்களும் வாகன விபத்துக்கு ஆளாவார்கள்.

நீதிபதிகளின் கை ஓங்கும். வழக்கறிஞர்களின் வருமானம் அதிகரிக்கும். ஊழல்வாதிகள் பெரிய பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். ஜனநாயகம் தழைக்கும். பெயரில் M, R, P, T, V, ஆகிய எழுத்துக்களில் ஒன்றை முதலெழுத்தாகக் கொண்டவர்கள் பிரபலம் ஆவார்கள்.

26.3.12 முதல் 11.9.12 வரை சனி பகவான் வக்ரகதியில் கன்னி ராசியில் வந்து அமர்வதால், இந்த காலகட்டத்தில் கல்வி நிறுவனங்களும் மாணவர்களும் பாதிப்படைவார்கள். அரசாங்கத்துக்கும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கும் பனிப்போர் அதிகரிக்கும். தேர்வு முறையில் குளறுபடிகள், வினாத் தாள்கள் முன்னரே வெளியாகுதல் போன்ற நிலை ஏற்படும்.

தொழில்நுட்ப கல்லூரிகளில் காலியிடங்கள் அதிகரிக்கும். சனி பகவான் உச்சம் பெற்று அமர்வதால் சி.ஏ., கேட்டரிங், ஷிப்பிங், சிவில் மெக்கானிக்கல், டிசைனிங், விஷ§வல் கம்யூனிகேஷன், சுற்றுலா, சட்டம் போன்ற கல்வி பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். வணிகவியல், ஐ.ஏ.எஸ் துறை பாடங்கள் மாற்றியமைக்கப்படும். கணினித் துறை மேலும் வளர்ச்சி பெறும். ஆனால் 2014-ன் தொடக்கத்திலிருந்து சரிவை சந்திக்கும்.

இந்தியாவின் கடக ராசிக்கு 4-ம் வீட்டில் சனி அமர்வதால், இங்கே தொழில் துவங்க உலகநாடுகள் போட்டி போடும். எனினும், அந்நிய நாடுகள் சிலவற்றின் ராஜதந்திரத்தால், நமது பொருளாதாரம் பாதிப்படையலாம்.

நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க, அதிநவீன ஆயுதங்களை இந்தியா கொள்முதல் செய்யும். நவீன செயற்கை கோள்களும் விண்ணில் ஏவப்படும். மத்திய அரசு கவிழும் அபாயம் உண்டு. தலைவர்களின் உயிருக்கு ஆபத்து உண்டாகும். சுவிஸ் உட்பட மேலை நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தில் ஒரு பகுதி வெளியாகும்.

பசு, ஆடுகள், குதிரை மற்றும் யானைகளின் எண்ணிக்கை குறையும். வன விலங்குகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும். கிரானைட், மார்பிள், டைல்ஸ் போன்றவற்றின் விலை குறையும். ஆனால் மணல், சிமென்ட், கம்பி, செங்கல் போன்றவற்றின் விலை உயரும். புகழ்பெற்ற கட்டுமான நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்திக்கும். சுரங்கத் தொழிலும் பாதிப்பு அடையலாம்.

பேருந்து, ரயில் மற்றும் விமானக் கட்டணங்களும், சமையல் எரிவாயு விலையும் உயரும். தங்கம் விலை சற்று குறைந்து, 2012 மத்தியிலிருந்து உயரும். மின் பற்றாக்குறை 2012-ன் பிற்பகுதியில் சரியாகும். பெட்ரோலின் மதிப்பு உயரும்.

கண், பிறப்புறுப்புகள், விந்தணுக்கள் மற்றும் கர்ப்பப்பையை பாதிக்கும் கிருமிகள் வளரும். பருவம் தப்பி மழை பொழிந்தாலும், நீர்நிலைகள் நிரம்பி வழியும். வெள்ளப் பெருக்கால் நிலச் சரிவு, நில அரிப்பு ஏற்படலாம். அரிய வகை வைரங்கள் கண்டறியப்படும். நிழல் உலக தாதாக்கள் மற்றும் மோசடி பேர்வழிகளால் பரம்பரை பணக்காரர்கள் பாதிப்படைவார்கள். சிறுபான்மையின மக்களுக்கு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கிடைக்கும். வங்கிகளில் வாராக் கடன் அதிகரிக்கும். புதிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வரும். விளை நிலங்கள், நீர் நிலைகளைப் பாதுகாக்க புது சட்டம் வரும்.

ரிஷபம், சிம்மம் மற்றும் தனுசு ராசிக் காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி திடீர் யோகங்களையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தரும். மிதுனம், கன்னி, துலாம், மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு மத்திம பலன்கள் உண்டாகும்.

மேஷம், கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு காரியத் தடைகளும், சிறு சிறு பாதிப்புகளும் வந்து நீங்கும்.
______________________________________________________________________

மேஷம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

எதையும் நேரிடையாகப் பேசுபவர் நீங்கள். 21.12.2011 முதல் 16.12.2014 வரை, உங்கள் பாதகாதிபதியான சனி வலுவடைந்து, 7-ல் அமர்கிறார். பிரபலங்கள் உதவுவர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வர். எனினும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலம் இது.

தம்பதிக்குள் வீண் சந்தேகம் எழும். உங்களுக்குள் பிரச்னை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பார்கள். ஆபரணங்கள், வங்கிக் காசோலைகளை, கையாளும்போதும், முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போதும் கவனம் தேவை. அரசு வரிகளை தாமதிக்காமல் செலுத்துவது நல்லது. சட்டத்துக்குப் புறம்பான வகையில் செல்லவேண்டாம். முக்கியப் பணிகளை நீங்களே மேற்கொள்வது நல்லது. வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தைப் பிரிய நேரிடலாம். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பச்சிதைவால் ஆரோக்கியம் பாதிக்கும். வீண் செலவுகள் வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

சனி பகவான் வக்கிரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்கிறார். இந்த கால கட்டத்தில் பண வரவு, வி.ஐ.பி-களுடன் நட்பு உண்டாகும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிநாதனும் -அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில், 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனி பகவான் செல்வதால், இந்த காலகட்டத்தில் உடல்நிலை சற்று பாதிக்கலாம். 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால், தைரியமாக சில காரியங்களை முடிப்பீர்கள். சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

9.11.2012 முதல் 11.12.2013 வரை; 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சிறு சிறு விபத்துகள் ஏற்படலாம். வேலை கிடைக்கும். வழக்கு சாதகமாகும்.

உங்கள் பாக்ய-விரயாதிபதியான குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்வதால் 12.12.2013 முதல் 18.5.2014 வரை; 11.9.2014 முதல் 16.12.2014 வரையிலான காலகட்டத்தில் செல்வம், செல்வாக்கு கூடும். தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். தந்தைவழி சொத்துகளும், எதிர்பார்த்திருந்த பணமும் வந்து சேரும். வங்கிக் கடன் கிடைக்கும். மகளுக்கு கல்யாணம் சிறப்பாக முடியும். பிள்ளைகள் அயல்நாடு செல்வார்கள்.

சனி ராசியைப் பார்ப்பதால், சாப்பாட்டில் கவனம் தேவை. புளி, உப்பை உணவில் குறைத்துக் கொள்ளுங்கள். சனி 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வீடு- வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சொந்த வாகனத்தில் இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். சனி 9-ம் வீட்டைப் பார்ப்பதால் சேமிப்புகள் கரையும்; தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் அதிக முதலீடு, கூட்டுத் தொழில் வேண்டாம். பாக்கிகளை இதமாகப் பேசி வசூலியுங்கள். கடையை மாற்றவேண்டிய சூழல் வரும். கமிஷன், மருந்து வகைகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில், மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். எதிர்பாராத இடத்துக்கு மாற்றப்படுவீர்கள். பழைய அதிகாரிகள் உதவுவர். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட வேண்டாம்.

கன்னிப் பெண்கள், உயர்கல்வியில் கவனம் செலுத்துங் கள். மாணவர்களுக்கு, அலட்சியப்போக்கால் மதிப்பெண் குறையலாம்; கவனம் தேவை. விளையாட்டின்போது சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கலைஞர்களே! சிறு வாய்ப்பாக இருந்தாலும், அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்துங்கள்; சம்பள பாக்கி கைக்கு வரும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, சுற்றியுள்ளவர்களின் சுய ரூபத்தை அறிய வைப்பதுடன், புதிய பாதையில் அழைத்துச் சென்று, உங்களை வெற்றி பெற வைப்பதாக அமையும்.
______________________________________________________________________
ரிஷபம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

கடும் உழைப்பாளி நீங்கள். 21.12.2011 முதல் 16.12.2014 வரை சனி பகவான் 6-ம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகம் உண்டாகும். பக்குவமான பேச்சால் பல காரியங்களைச் சாதிப்பீர்கள். நிம்மதி தேடி வரும். அறிவும், அழகும் வாய்ந்த குழந்தை பிறக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

பிள்ளைகள், உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வர். சிலர், சொந்த வீடு கட்டி குடிபுகுவீர்கள். கையில் பணம் தங்கும்; சேமிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகளை, அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில், புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். வீடு வாங்க, தொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். தாய்வழி உறவினர்களுடனான மனக்கசப்புகள் நீங்கும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வரும். பங்காளிப் பிரச்னைகள் ஓயும். வழக்கு சாதகமாகும். நாடாளுபவர்கள் அறிமுகமாவர்.

சனி பகவான் வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்கிறார். இந்த காலகட்டத்தில் பிள்ளைகளால் செலவு, பூர்வீகச் சொத்தில் சிக்கல்கள் வந்து நீங்கும். கர்ப்பிணிகள் எடை மிகுந்த பொருட்களை கையாள வேண்டாம்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் சப்தம- விரயாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை சனி செல்கிறார். வீடு- மனை சேரும். அரசால் ஆதாயம் உண்டு. மனைவி வழியிலும் சகோதர வகையிலும் உதவிகள் கிடைக்கும். 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால், மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, சிறு வாகன விபத்து வந்து நீங்கும்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை... ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், திடீர் பண வரவும், யோகமும் உண்டாகும். அயல்நாடு சென்று வருவீர்கள். திருமணம், கிரகப் பிரவேசம் என வீடு களைகட்டும். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும்.

12.12.13 முதல் 18.5.14 வரை மற்றும் 11.9.14 முதல் 16.12.14 வரையிலும் உங்கள் அஷ்டம- லாபாதிபதியான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்கிறார். கொஞ்சம் அலைச்சல், செலவுகள், மூத்த சகோதரர் வகையில் மனத்தாங்கல் ஏற்பட்டாலும், மற்றொரு பக்கம் செல்வாக்கும், பணப் புழக்கமும், ஆபரணச் சேர்க்கையும் உண்டாகும். அரசாங்கத்தால் ஆதாயம் அடைவீர்கள்.

சனி 3-ம் வீட்டைப் பார்ப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கௌரவம் கூடும். எனினும், கூடாப் பழக்கவழக்கங்களையும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகளையும் தவிர்க்கவும். சனி 8-ம் வீட்டைப் பார்ப்பதால், வாகனங் களை இயக்கும்போது கவனம் தேவை. எவருக்கும் ஜாமீன் போடவேண்டாம். சனி 12-ம் வீட்டைப் பார்ப்பதால், வராது என்றிருந்த பணமும் வந்து சேரும். உறவினர்- நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. பாக்கிகள் எளிதில் வசூலாகும். தேங்கிய சரக்குகள் விற்றுத் தீரும். புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வியாபாரிகள் சங்கத்தில், பெரிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சியடையும். பங்குதாரர்கள், வேலை ஆட்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில், பதவி- சம்பள உயர்வு உண்டு. மேலதிகாரியுடன் இருந்த மோதல் நீங்கும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

கன்னிப் பெண்கள், உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை நலமாகும். மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் உண்டு. கலைஞர்கள், வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழ் அடைவர்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி ராஜ யோகத்தைத் தருவதுடன், எதிலும் வெற்றி வாகை சூடவைக்கும்
_____________________________________________________________________

மிதுனம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

இங்கிதமான பேச்சுக்கு சொந்தக்காரர் நீங்கள். சனி பகவான் 21.12.2011 முதல் 16.12.2014 வரை, 5-ம் வீட்டில் அமர்கிறார். எதிலும் நல்லதே நடக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான சனி பகவான் உச்சமாகி வலுவடைவதால், கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும்.

குடும்பத்தில் குதூகலம் பொங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி விரைவில் பூர்த்தியாகும். உங்களின் செல்வாக்கு கூடும். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

5-ம் இடத்தில் சனி அமர்வதால், குழந்தை பாக்கியம் இல்லாதவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எனினும் கர்ப்பிணிகள் நெடுந்தூர பயணத்தைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்களின் நட்பு வட்டாரத்தையும் கண்காணிப்பது நல்லது. அவர்கள் விரும்பும் பாடப் பிரிவில், உயர்கல்வி பெற அனுமதியுங்கள். அவ்வப்போது மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை, யோகா மற்றும் தியானத்தால் போக்கலாம். தேக வலிமை கூடும். சொத்து வாங்குவீர்கள். சனி பகவான் வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்கிறார். இந்த காலகட்டத்தில் வேலைப்பளு, வீடு-வாகன பராமரிப்புச் செலவுகள், தாயாருக்கு உடல்நலக் குறைபாடு, பணப்பற்றாக்குறை ஏற்படலாம்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

சனி பகவான் 21.12.11 முதல் 8.11.12 வரை, உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டதிபதியும் - லாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் செல்கிறார். பழைய கடனை அடைக்க புது வழி பிறக்கும். சகோதரியின் திருமணம் முடியும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். இருமல், யூரினரி இன்ஃபெக்ஷன், காய்ச்சல் வந்து நீங்கும். 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைகிறார்; பயணங்கள் அதிகரிக்கும். எதிர்த்துப் பேசியவர்களும் வலிய வந்து உங்களை ஆதரிப்பர்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை... ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், பணப் புழக்கம் அதிகரிக்கும். வீட்டு விசேஷங்களை எடுத்துக் கட்டி செய்வீர்கள். புது டி.வி., ஃப்ரிஜ் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புள்ள நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரை உங்கள் சப்தம - ஜீவனாதிபதியான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்கிறார். இந்த காலகட்டத்தில், மனைவி வழி உறவினர்கள் உதவுவர். எனினும், அவர்களால் செலவுகளும் அதிகரிக்கும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் மரியாதை கூடும்.

சனி 2-ம் வீட்டைப் பார்ப்பதால், கண் பரிசோதனை அவசியம். எவருக்கும் எதற்காகவும் வாக்குறுதி தர வேண்டாம். சனி பகவான் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு கால் வலி, மரத்துப் போகுதல், மறதி வந்து நீங்கும். சனி லாப வீட்டைப் பார்ப்பதால், ஷேர் மூலம் பணம் வரும்.

வியாபாரம் சூடுபிடிக்கும். விளம்பரங்களால் விற்பனையை அதிகப்படுத்துவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயம் உண்டு. புரோக்கரேஜ் மற்றும் கல்வி நிறுவனங்களால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்கள், வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வி.ஐ.பி-கள் உங்களின் வாடிக்கையாளர் ஆவார்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில், கடின வேலைகளையும் எளிதில் முடிப்பீர்கள். செல்வாக்கு கூடும். கேட்ட இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும்.

கன்னிப் பெண்களுக்கு, உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வேலை கிடைக்கும். கல்யாணம் கூடிவரும். மாணவர்களுக்கு அலட்சியம் நீங்கும். விளையாட்டில் பதக்கங்கள் உண்டு.கலைஞர்களுக்கு, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, நட்பு வட்டத்தை விரிவுபடுத்துவதுடன், எதிலும் விவேகமாகச் செயல்பட்டு, சாதிக்க வைப்பதாக அமையும்.
______________________________________________________________________

கடகம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

கலை உணர்வு மிகுந்தவர் நீங்கள். 21.12.2011 முதல் 16.12.2014 வரையிலும் சுக வீடான 4-ம் வீட்டில் சனி அமர்கிறார்.

அலைச்சல் உண்டு. ராசிக்கு 7 மற்றும் 8-ம் வீட்டுக்கு அதிபதியாக சனி அமைவதால், வீட்டில் இல்லத்தரசியின் கை ஓங்கும். சொந்த ஊரை விட்டு இடம்பெயர்வீர்கள். அர்த் தாஷ்டம சனியாக அமர்வதால், சிறு வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். செலவுகள் அதிகரிக்கும். எந்த வேலையையும் நீங்களே முன்னின்று முடியுங்கள்.

வீடு வாங்குவது, கட்டுவது இழுபறியாகும். எந்த சொத்து வாங்கினாலும், தாய் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது. வாகனம் அடிக்கடி தொல்லை தரும். விலையுயர்ந்த பொருட்களை இரவல் தருவதோ, வாங்குவதோ வேண்டாம். தம்பதிக்குள் பிரச்னை வந்தாலும் பெரிதுபடுத்த வேண்டாம். கட்டடப் பணிகளில், அரசு அனுமதி இல்லாமல் கூடுதல் தளங்கள் கட்டவேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். அயல்நாட்டுப் பயணம், சாதகமாகும். பிள்ளைகள் செலவு வைப்பர். பண விஷயத்தில் கவனம் தேவை.

26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சனி அமர்வதால் புகழ், கௌரவம் உயரும். பண பலம் கூடும். உங்களின் யோகாதிபதிகளான செவ்வாய், குரு பகவானின் நட்சத்திரத்தில் அதிக நாட்கள் சனி செல்வதால், யோக பலன்கள் அதிகரிக்கும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் பூர்வ புண்யாதிபதியும் - ஜீவனாதி பதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை சனி செல்கிறார். எதிர்பார்த்த பணம் வரும். சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். 4.2.12 முதல் 22.6.12 வரை, சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால் கடன் பிரச்னை, வாகன விபத்து, நெருப்பு காயங்கள், வாயுக் கோளாறு வந்து நீங்கும். மின் சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்கிறார்; திடீர் பயணங்கள், செலவுகள், வழக்கால் நெருக்கடி வந்து நீங்கும். தாயாருக்கு உடல் நலம் பாதிக்கும். சொந்தபந்தங்களுடன் பிரிவுகள் வரும். சொத்து வரி, வருமான வரியை செலுத்துவதில் அலட்சியம் வேண்டாம். உங்கள் சஷ்டமாதிபதியும் - பாக்யாதிபதியுமான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்வதால், 12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரையிலான காலகட்டத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வீடு, வாகன வசதிகள் பெருகும். சிலருக்கு புது வேலை கிடைக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால் அவ்வப்போது களைப்பு வந்து நீங்கும்; கோபம் மேலோங்கும். சனி 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பண வரவு அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனி 10-ம் வீட்டைப் பார்ப்பதால், உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். வேலை மாறுவீர்கள். புதிய பொறுப்புகளும் உங்களை நம்பித் தரப்படும்.

வியாபாரத்தில் கறாராக இருங்கள். போட்டிகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப கொள்முதல் செய்யவும். பெரிய முதலீடுகள் வேண்டாம். பங்குதாரர்களிடம் கருத்து மோதல்கள் வந்தாலும், கடைசியில் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுவார்கள். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மூலிகை வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். சிலர், உங்களை வழக்கில் சிக்க வைக்க முயல்வார்கள். கடின உழைப்பால் பதவி- சம்பள உயர்வு பெறுவீர்கள்.

கன்னிப் பெண்கள், புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். மாணவர்கள், படிப்பில் கவனம் செலுத்தவும். கலைஞர்களுக்கு வேற்று மொழி பேசுபவர்களால், புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, அலைச்சல், செலவுகளைத் தந்தாலும், முடிவில் இலக்கை எட்டிப்பிடிக்க வைக்கும்.
________________________________________________________________________

சிம்மம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

தலைமைப் பண்பு அதிகம் உள்ளவர் நீங்கள். சனி பகவான், 21.12.2011 முதல் 16.12.2014 வரை, 3-ம் வீட்டில் அமர்வதால் தொட்டது துலங்கும். முயற்சிகள் வெற்றி பெறும். இழந்த செல்வம், செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

குடும்பத்தில் குதூகலம் நிறையும். பெண்ணுக்கு நல்ல வரன் அமையும். பிள்ளை இல்லாமல் வருந்தியவர்களுக்கு, அழகிய வாரிசு உருவாகும். கடன்பட்டாவது சொந்த வீடு வாங்குவீர்கள். இனி, பேச்சில் கறாராக இருப்பீர்கள்.

சனி பகவான் வக்ரமாகி, 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் பாதச் சனியாக அமர்வதால், பணம் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. சிறு சிறு விபத்துகள் ஏற்படலாம். கேரண்டி கையெழுத்து போட வேண்டாம்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியான அதாவது சுக-பாக்யாதிபதியான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை, சனி செல்கிறார். இந்த காலகட்டத்தில் சொத்து சேரும். வேலை கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.

சுப நிகழ்வுகளால் வீடு களை கட்டும். வி.ஐ.பி-கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால், செலவுகள் கூடும். உறவினர்-நண்பர்களும் குறை கூறுவர். பெற்றோரின் உடல் நிலை பாதிக்கும்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை, ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், பணப் புழக்கம் அதிகரிக்கும்; கடனை பைசல் செய்வீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வழக்கு சாதகமாகும்.

12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரை உங்கள் பூர்வ புண்ணியாதி பதியும்-அட்டமாதிபதியுமான குரு பகவானின் விசாக நட்சத்திரத்தில் சனி பகவான் செல்கிறார். இந்த காலகட்டத்தில், பிள்ளை பாக்யம் கிட்டும். நீங்கள் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு; பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் திடீர் லாபம், உத்தியோகத் தில் பதவி உயர்வு உண்டு.

சனி 5-ம் வீட்டைப் பார்ப்பதால் பூர்வீகச் சொத்தை மாற்றி அமைப்பீர்கள். பிள்ளைகளின் உயர் படிப்பு, திருமணத்துக்காக அதிகம் செலவு செய்வீர்கள்.

சனி 9-ம் வீட்டைப் பார்ப்பதால், அந்தஸ்து உயரும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சனி 12-ம் வீட்டைப் பார்ப்பதால், ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள்- சித்தர்கள் போன்றோரின் தொடர்பு கிடைக்கும்.

வியாபாரத்தில், கடையை நவீனமயமாக்குவீர்கள். வேலை ஆட்களை மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளால், பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அயல்நாட்டுத் தொடர்புடனும் வியாபாரம் செய்வீர்கள்.

உத்தியோகத்தில், உங்களுக்கு பிரச்னை தந்து வந்த மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். இதுவரை தடைப்பட்டிருந்த பதவி உயர்வும் இனி கிடைக்கும். சிலருக்கு அதிகச் சம்பளத்துடன் புது வேலை அமையும். வழக்குகள் சாதகமாகும்.

கன்னிப் பெண்கள், தடைப்பட்ட கல்வியைத் தொடர்வீர்கள். பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். திருமணம் உடனே முடியும். மாணவர்களுக்கு, மதிப்பெண் உயரும். கலை- விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெறுவார்கள். கலைஞர்கள் குறித்த கிசுகிசுத் தொல்லைகள் விலகும். நினைத்தது நிறைவேறும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, வெற்றிக்கனியை பறிக்க வைப்பதுடன், பகட்டான வாழ்வையும் அமைத்துத் தருவதாக அமையும்.
_______________________________________________________________________

கன்னி

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

மனிதநேயம் மிகுந்தவர் நீங்கள். சனி பகவான், 21.12.2011 முதல் 16.12.2014 வரை பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார். உங்களின் பிரபல யோகாதிபதியான சனி பகவான் உச்சம் அடைந்து வலுவாக அமர்வதால், பணப் புழக்கம் அதிகரிக்கும் எதிர்மறை எண்ணங்கள், வீண் பயம் ஆகியன நீங்கும்.

மதிப்பு உயரும். தவறான முடிவுகளால் பிரச்னைகள் சூழ்ந்த நிலை மாறும். உடல் நிலையும் சீராகும். எனினும் எளிய உடற்பயிற்சியும், உணவுக் கட்டுப்பாடும் தேவை.

சுற்றியுள்ளவர்களில் நல்லவர்களை அடையாளம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவியின் மனக் குழப்பங்கள் நீங்கும்; உற்சாகம் மேலோங்கும். எனினும் பாதச் சனியாக அமைவதால், தம்பதிக்குள் ஈகோ பிரச்னை தலை தூக்கலாம். எல்லோரிடமும் கனிவுடன் பேசுங்கள். மற்றவர் பிரச்னையில் தலையிடுவது, சாட்சி கையெழுத்திடுவது வேண்டாம். பார்வைக் கோளாறு, பல் வலி வந்து நீங்கும். காலில் சிறு சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். அரசாங்க விஷயங்கள் தாமதமாகி முடியும். சனி வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு ஜென்மச் சனியாக அமர்கிறார். இந்த காலகட்டத்தில் வீண் விரயம், விரக்தி, ஏமாற்றம், காரியத் தடை வந்து நீங்கும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் திருதியஸ்தானாதிபதியும்-அஷ்டமாதி பதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை சனி செல்கிறார். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். மனைவிக்கு மாதவிடாய் பிரச்னை வந்து நீங்கும். 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால், பழைய பிரச்னைகள் தீரும். புது சொத்து வாங்குவீர்கள். அதிகார பதவியில் அமர்வீர்கள்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், மதிப்பு கூடும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த பணம் வரும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். உத்தியோகத்தில் சிறுசிறு இடையூறுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. வாகனப் பழுது நீங்கும். திருமணம் கூடி வரும்.

12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரை உங்கள் சுக-சப்தமாதிபதியான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்கிறார். இந்த காலகட்டத்தில் தாய் வழியில் செலவுகள் வரும். வீடு மாறுவீர்கள். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். கல்யாணம், காதுகுத்து என வீடு களை கட்டும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

சனி பகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். சில காரியங்களை போராடி முடிக்கவேண்டி வரும். சனி பகவான் 8-ம் வீட்டை பார்ப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பழைய கடனை நினைத்து புலம்புவீர்கள். லாப வீட்டைப் பார்ப்பதால் திடீர் பண வரவு உண்டு. வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

வியாபாரத்தில், போட்டியாளர்களைச் சமாளிக்கும் வகையில் உங்கள் அணுகுமுறை மாறும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். உத்தியோகத்தில், உங்களை ஆதரிக்கும் புதிய அதிகாரி வந்து சேர்வார். இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். சிலருக்கு, அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.

கன்னிப் பெண்களுக்கு, தடைப்பட்டிருந்த திருமணம் நல்லவிதமாக நடந்தேறும். மாணவர்களுக்கு, விரும்பிய நிறுவனத்தில் உயர்கல்வியைத் தொடர்வீர்கள். கலைஞர்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, ஆரோக்கியத்தையும் பண வரவையும் தருவதாக அமையும்.
_________________________________________________________________________

துலாம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

தோல்வியைக் கண்டு துவளாதவர் நீங்கள். சனி பகவான், 21.12.2011 முதல் 16.12.2014 வரையிலும் ஜென்மச் சனியாக அமர்கிறார். அதற்காக கவலை வேண்டாம். சனி உங்களுக்கு சுகப் பூர்வ புண்யாதிபதியாக வருவதால் நல்லதையே செய்வார். உச்சமாகி சுபத்தன்மை அடைவதால், பண வரவையும் அதிகரிப்பார். வாழ்வில் நிம்மதி பிறக்கும். பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வர்.

எனினும், ஜென்மச் சனி என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நேரம் தவறாமல் சாப்பிடவும். பொரித்த- வறுத்த உணவு வகைகளைத் தவிர்க்கவும். திடீர் பயணங்க ளால் அலைச்சல் ஏற்படும். இளைய சகோதரரை அனுசரித்துப் போகவும். அரைகுறையாக நின்ற வீடுகட்டும் பணி தொடர, வங்கிக் கடனுதவி கிடைக்கும். எவரிடமும் சொந்த விஷயங் களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். வி.ஐ.பி-களின் நட்பால் ஆதாயம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வீடு, மனை வாங்குவீர்கள்.

சனி பகவான் வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை, உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் கடன் பிரச்னை, திடீர் பயணம், வீண் செலவுகள், கவலைகள் வந்துசெல்லும். வாகனத்தில் செல்லும்போதும் சாலையை கடக்கும்போதும் கவனம் தேவை.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் தனாதிபதியும் - சப்தமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை சனி செல்கிறார். திடீர் பண வரவு உண்டு. இழுபறியான வேலைகள் பூர்த்தியாகும். அரசால் அனுகூலம், மனைவி வழியில் ஆதாயம் உண்டு. 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைகிறார். எனவே மனைவியுடன் மோதல், செலவுகள், சிறு சிறு நெருப்பு காயங்கள், வாகனப் பழுது வந்து நீங்கும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், திடீர் திருப்பம் உண்டாகும். சொத்து வாங்குவது- விற்பது சாதகமாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். புது வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு, நல்ல பதில் கிடைக்கும்.

உங்கள் 3-ம் வீட்டதிபதியும் 6-ம் வீட்டதிபதியு மான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்வதால், 12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரையிலும், உங்கள் முயற்சிகள் பலிதமாகும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.

குழந்தை பாக்கியம் கிட்டும் மூத்த சகோதர வகை யில் நன்மை உண்டு. புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். எனினும் விபத்து, இனந்தெரியாத கவலைகள் வந்து செல்லும். சனி பகவான் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் கௌரவப் பதவி கிடைக்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு கால் வலி, கழுத்து வலி வந்து நீங்கும். வீண் சந்தேகத்தை குறையுங்கள். சனி 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலை மாறுவீர்கள். சிலர், சுய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.

வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது அவசியம். ஹோட்டல், கணினி உதிரிபாகங்கள், துணி வகை களால் லாபம் உண்டு. பங்குதாரர்களிடம் வளைந்துகொடுத்து போகவும். உத்தியோகத்தில், சம்பள - பதவி உயர்வு உண்டு. அலுவலக ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. சட்டத்துக்கு புறம்பாக எவருக்கும் உதவ வேண்டாம்.

கன்னிப் பெண்களுக்கு, தடைப்பட்ட கல்யாணம் கைகூடி வரும். மாணவர்கள், அரசுத் தேர்வில் நல்ல மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவீர்கள். கலைஞர்களுக்கு, வீண் வதந்திகள் இருக்கத்தான் செய்யும்; மனம் தளர வேண்டாம். சம்பள விஷயத்திலும் கண்டிப்பு காட்டாதீர்கள்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களுக்கு பணப் புழக்கத்தையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.
_______________________________________________________________________

விருச்சிகம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

மனசாட்சிப்படி செயல்படுபவர் நீங்கள். சனி பகவான் 21.12.2011 முதல் 16.12.2014 வரை விரயச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். உங்கள் ராசிநாதனான செவ்வாய்க்கு பகைக் கோளாக வரும் சனி, ராசிக்கு 12-ல் சென்று மறைவதால், தடைப்பட்ட காரியங்கள் விரைந்து முடியும்.

தற்போது விரய வீட்டில் வந்தமரும் சனி, யோக பலனையே தருவார். ஆனாலும், வீண் செலவுகள் வேண்டாம். தீர்க்க முடியாத பிரச்னைக்கும் தீர்வு காண்பீர்கள். தம்பதிக்குள் பனிப்போர் விலகும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். மகான்களின் ஆசி கிட்டும். சனி 6-ம் வீட்டைப் பார்ப்பதால், வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங் கண்டறிவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். எவருக்காகவும் ஜாமீன் போட வேண்டாம். முக்கிய கோப்புகளைக் கவனமாக கையாளுங்கள். சனி வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், திடீர் யோகம், பண வரவு, வீடு- வாகன வசதி, வி.ஐ.பி-களின் அறிமுகம் எல்லாம் உண்டாகும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிநாதனும்-சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை சனி செல்கிறார். ஆரோக் கியத்தில் கவனம் தேவை. எனினும் தன்னம்பிக்கை பிறக்கும். பூமி சேர்க்கை உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். பண வரவு உண்டு. தாய்வழி சொத்து கைக்கு வரும். பெரிய பதவிகள் தேடி வரும். 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி பகவான் வக்ரம் அடைவ தால் திடீர் பயணங்கள், வீண் டென்ஷன், பாகப் பிரிவினையால் பிரச்னைகள் வந்து செல்லும்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்கிறார். புதிய நண்பர்களால் வாழ்க்கையில் திருப்பங்கள் உண்டாகும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அடிப்படை வசதிகள் பெருகும்.

உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-தனாதிபதியு மான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்வதால், 12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரை, தொட்டது துலங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். குலதெய்வ நேர்த்திக்கடனை செய்து முடிப்பீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். புது வேலை கிடைக்கும்.

சனி 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். ஆனால் செலவுகளும் துரத்தும். சனி 6-ம் வீட்டைப் பார்ப்பதால், வழக்கு சாதகமாகும். நோய் விலகும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். சனி பகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், தந்தைக்கு நெஞ்சு வலி வந்து நீங்கும்.

வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்யுங்கள். போட்டிகளையும் மீறி ஓரளவு சம்பாதிப்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மருந்து, கமிஷன், மர வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களுடன் அவ்வப்போது மோதல்கள் வரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர் கள். மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். உத்தி யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி உண்டு.

கன்னிப் பெண்களுக்கு, திருமண முயற்சி பலிதமாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும்.கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவியும். எனினும் உங்களின் படைப்புகளுக்கு, சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, யதார்த்தமான முடிவு களால் முன்னேற்றத்தையும், விட்டுக்கொடுக்கும் போக்கால் வெற்றியையும் தருவதாக அமையும்.
___________________________________________________________________________

தனுசு

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

உதவும் மனம் கொண்டவர் நீங்கள். சனி பகவான் 21.12.2011 முதல் 16.12.2014 வரை, லாப வீட்டில் அமர்கிறார். எதிலும் உங்கள் கை ஓங்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். பண வரவுக்கு பஞ்சம் இருக்காது. சேமிக்கும் எண்ணமும் வரும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

கணவன்-மனைவிக்குள் கலந்து பேசி குடும்பச் செலவு களைக் குறைக்க முடிவெடுப்பீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றிவிட்டு, ரசனைக்கேற்ற புது வீடு வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு அயல் நாட்டில் உயர்கல்வி அமையும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள். அக்கம்பக்கத்தாரின் ஆதரவு பெருகும். தாய் வழி விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். அத்தை- மாமன் வழியிலான பிணக்குகள் நீங்கும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு.

சனி பகவான் வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால், உத்தியோகத்தில் வேலைச் சுமை, மறைமுக அவமானம், ஏமாற்றம் வந்து செல்லும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-விரயாதிபதியு மான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை சனி செல்கிறார். இந்த காலகட்டத்தில், சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சகோதரிக்கு வேலை கிடைக்கும். உங்களை எதிரியாக நினைத்த பலரும், இனி உங்களின்

நல்ல மனசைப் புரிந்துகொள்வர். பாதிப் பணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால்... பிள்ளைகளால் அலைச்சல், உறவினர்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஏமாற்றியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்கு வீர்கள். தூரத்துச் சொந்தங்கள் தேடி வரும். 12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரை, உங்கள் ராசிநாதனும் - சுகாதிபதியுமான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி பகவான் செல்வதால், தடைப்பட்ட திருமணப் பேச்சுவார்த்தை கூடிவரும். வி.ஐ.பி-கள் உதவுவர். அரசாங்க நெருக்கடிகள் நீங்கும். பெரிய பதவிகள் தேடி வரும்.

சனி பகவான் ராசியைப் பார்ப்பதால், டென்ஷன், அலர்ஜி, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். சனி பகவான் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகளின் பலம்- பலவீனத்தை உணர்வீர்கள். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனி பகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை.

வியாபாரத்தில், தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்திய மாக விற்றுத் தீர்ப்பீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களால், புகழ் கூடும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்கள், உங்கள் கோரிக்கையை ஏற்பர். உத்தியோகத்தில், உங்களின் நிர்வாகத் திறமை கூடும். புது பொறுப்புகள் தேடி வரும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.

கன்னிப் பெண்களுக்கு, நல்ல கணவன் வாய்ப்பார். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு, மதிப்பெண் உயரும். விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள். கலைஞர்களே, புதிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். சம்பள பாக்கி வந்துசேரும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களுடைய வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைப்பதாக அமையும்.
__________________________________________________________________________

மகரம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

மதிப்பவரை மதிக்கும் நீங்கள், மீறுபவர்களை மிதிக்கத் தயங்கமாட்டீர்கள். சனி பகவான் 21.12.2011 முதல் 16.12.2014 வரை, 10-ம் வீட்டில் அமர்வதால் திடீர் யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதனான சனி உச்சமாகி யோகாதிபதியான சுக்ரனின் வீட்டில் அமர்வதால், விஸ்வரூபம் எடுப்பீர்கள்.

தொட்டது துலங்கும். எங்கு சென்றாலும் மரியாதை கிடைக்கும். திறமைகள் வெளிப்படும். கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் நீங்கும். பிள்ளைகள், உங்களைப் புரிந்து கொள்வர். தந்தையுடனான மோதல்கள் விலகும். பிதுர் வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வராது என்றிருந்த பணம் வந்து சேரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க, வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சகோதரர்கள் உதவுவார்கள். குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை வரம் கிடைக்கும். உங்களுடன் பழகிக்கொண்டே உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களை புறந்தள்ளுவீர்கள். அக்கம்பக்கத்தாருடன் மனஸ்தாபம் நீங்கும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். சேமிக்கத் துவங்குவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாகும். வழக்கில் வெற்றியுண்டு.

சனி பகவான் வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால், வீண் விரயம், பணப் பற்றாக்குறை, தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் சுகாதிபதியும்-லாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில், 21.12.11 முதல் 8.11.12 வரை சனி செல்வதால், பண வரவு அதிகரிக்கும். மகளுக்குத் திருமணம் கூடி வரும். புது வேலை கிடைக்கும். ஆனால், செவ்வாய் பாதகாதிபதியாக வருவதால் அடிவயிற்றில் வலி, முதுகுத் தண்டு மற்றும் முழங்கால் வலி வந்து நீங்கும். கார உணவுகளைத் தவிர்க்கவும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால் ஒரு சொத்தை விற்று, வேறு சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், கடன் குறையும். நாடாளுபவர்கள் அறிமுகமாவர். வழக்கால் இருந்த நெருக்கடி நீங்கும். நவீன மின் சாதனங்கள் வாங்குவீர்கள். சிலர், வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள்.

12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல்

16.12.14 வரை உங்கள் திருதியாதிபதியும்- விரயாதிபதியுமான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்வதால், தைரியம் கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். புது முயற்சிகள் வெற்றியடையும். சொத்து சேர்க்கை உண்டு. திடீர் பயணம், செலவுகள் உண்டு. எவருக்கும் பணம், நகை வாங்கித் தர வேண்டாம்.

சனி 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் உடல்நலம் பாதிக்கும். தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலை தூக்கும். யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். சனி 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, சிறு சிறு அறுவை சிகிச்சை, அவருடன் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சனி 12-ம் வீட்டை பார்ப்பதால் தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும்.

வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பழைய கடையை புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் தேடி வரும். கண்ணாடி, துணி, பெட்ரோல் வகைகளால் லாபம் உண்டு. விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வருவர். 10-ம் வீட்டில் சனி வந்தமர்வதால் உத்தியோகத்தில் உயர்வு உண்டு. முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். சில வேலைகளைப் போராடி முடிக்க வேண்டி வரும். மேலதிகாரி உதவுவார். முக்கிய பதிவேடுகளை கவனமாகக் கையாளுங்கள். திடீர் இடமாற்றமும் சாதகமாக அமையும். கன்னிப் பெண்களுக்கு, வீட்டில் பார்க்கும் வரனே முடியும். வேலையும் கிடைக்கும். மாணவர்கள், போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். கலைஞர்கள், பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்கு பிரபலமாவீர்கள்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை குன்றிலிட்ட விளக்காய் பிரகாசிக்க வைக்கும்.

___________________________________________________________________________

கும்பம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

தாராள மனம் படைத்தவர் நீங்கள். சனி பகவான் 21.12.2011 முதல் 16.12.2014 வரை, 9-ம் வீட்டில் அமர்கிறார். இனி, எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பீர்கள். தன்னம்பிக்கை மேலோங்கும். உங்கள் ராசிநாதன் யோக வீட்டில் வலுவாக அமர்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். வசதியான வீட்டுக்கு குடிபெயர்வீர்கள். பிரச்னைகள், கவலைகள் நீங்கும். நிம்மதி பிறக்கும். தம்பதிக்குள் மனஸ்தாபம் நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்களும் வலிய வந்து பேசுவர். உங்களை ஏமாற்றியவர்கள் பணத்தைத் திருப்பித் தருவார்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வீடு வாங்கும் லட்சியம் நிறைவேறும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்காளிப் பிரச்னை தீரும். தந்தைக்கு ரத்த அழுத்தம், முதுகு- முழங்கால் வலி, சிறு சிறு அறுவை சிகிச்சை, அவருடன் கருத்துமோதல்கள் வந்து நீங்கும். பிதுர் வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும். பணம் வந்தாலும் செலவுகளும் கட்டுக்கடங்காமல் போகும்.

சனி பகவான் வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்வதால், இனம் தெரியாத கவலை, ஏமாற்றம், பொருள் இழப்பு, வாகன விபத்து வந்து செல்லும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் திருதியாதிபதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை சனி பகவான் செல்கிறார். இந்த காலத்தில், கம்பீரமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். சொத்து வாங்குவது- விற்பது லாப கரமாக அமையும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத் திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால் அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். உங்களின் பலம் - பலவீனத்தை உணர்வீர்கள். வீடு கட்டும் பணி முழுமையடையும்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்கிறார். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். திருமணத் தடை நீங்கும்.

12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரை, உங்கள் தனாதிபதியும்- லாபாதிபதியுமான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி பகவான் செல்வதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். ஷேர் மூலம் லாபம் அடைவீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.

சனி பகவான் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் திட்ட மிட்ட காரியங்கள் கைகூடும். அரசால் அனுகூலம் உண்டு. வீடு- வாகன வசதி பெருகும். சனி பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், துடிப்புடன் செயல்படுவீர்கள். சொத்து சேரும். வழக்கு வெற்றியடையும். சனி லாப வீட்டைப் பார்ப்ப தால், சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. அத்தை, மாமா வகையில் ஆதரவு பெருகும்.

வியாபாரத்தில், நல்ல வேலையாட்கள் அமைவார்கள். சந்தை நிலவரம் அறிந்து கொள்முதல் செய்வீர்கள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தேடி வரும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். வங்கிக் கடனை முடிப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, பாசுமதி அரிசி, எண்ணெய் வகைகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில், உங்கள் கை ஓங்கும். உங்களைப் புரிந்து கொள்ளும் அதிகாரி வந்து சேருவார். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங் களிலிருந்து புதிய வேலைகள் வந்து அமையும்.

கன்னிப் பெண்கள், தெளிவான முடிவுகளை எடுப்பார்கள். கல்யாணம் கூடிவரும். மாணவர்கள், விரும்பிய கோர்ஸில் சேரும் வாய்ப்பு அமையும். கலைஞர்களின் படைப்புகளுக்கு பாராட்டு கிடைக்கும்; அரசு உதவும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, ஆபத்தான சூழல்களை நீக்கி, கடின உழைப்பால் சாதிக்க வைக்கும்.
_________________________________________________________________________

மீனம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

சுற்றியிருப்பவர்களும் சுகமாய் வாழ வேண்டும் என நினைப்பவர் நீங்கள். சனி பகவான், 21.12.2011 முதல் 16.12.2014 வரை, 8-ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்கிறார். பேச்சில், செயலில் எச்சரிக்கை தேவை. எதிர்மறை எண்ணங்கள், நேரம்கெட்ட நேரத்தில் பயணம், வீண் பேச்சு ஆகியவற்றை தவிர்ப்பது நலம். வங்கிக் காசோலைகளை கையாளும்போதும், முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போதும் கவனம் தேவை.

மகனின் உயர் கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு சிலரது சிபாரிசை நாடுவீர்கள். மகளின் திருமணத்துக்காக கடன் வாங்க நேரிடும். பூர்வீகச் சொத்து பங்கை போராடி பெறுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். கடன் பிரச்னைகள் மனசை வாட்டும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். கர்ப்பிணிகள் மருத்துவ ரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரையும் உட்கொள்ள வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை.

சனி பகவான் வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்வதால், மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, சிறுசிறு அறுசை சிகிச்சை, அவருடன் கருத்துமோதல்களும் வந்து செல்லும். நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்யுங்கள். நடைப் பயிற்சியும் அவசியம்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் தனாதிபதியும்-பாக்யாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை சனி செல்கிறார். புதிய திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தை பாக்கியம் உண்டு. புதிதாக நிலம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். புது வேலை கிடைக்கும். ஆனால் தந்தைக்கு மருத்துவச் செலவு,

அவருடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால் சிறு விபத்து, மன உளைச்சல், ஒற்றைத் தலைவலி, உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி வந்து செல்லும்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், வாகனத்தை கவனமாக இயக் குங்கள். சட்டத்துக்குப் புறம்பான வகையில் எந்த முயற்சியும் வேண்டாம்.

12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரை, உங்கள் ராசிநாதனும் ஜீவனாதி பதியுமான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்வதால், தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வீடு மாறுவீர்கள் உறவினர்களுடன் பகை வரக்கூடும்.

மஞ்சள் காமாலை, காய்ச்சல் வந்து நீங்கும் எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று விட்டு, புது வீடு வாங்குவீர்கள். அரசாங்க வரிகளை உரிய நேரத்தில் செலுத்திவிடுங்கள்.

சனி ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால், சாதுர்ய மாகப் பேசுவீர்கள். சிலநேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி சிக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சனி பகவான் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள் வந்து சரியாகும். சனி 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்று மொழியினரால் ஆதாயம் அடைவீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பெரிய முதலீடுகள் வேண்டாம். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டட உதிரிப் பாகங்கள் மூலம் லாபம் வரும். பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில், புதிய அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். எனினும் சம்பளம் உயரும். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் சற்று தாமதமாகி கிடைக்கும்.

கன்னிப் பெண்கள், பெற்றோரை அனுசரித்துப் போகவும். மாணவர்கள், விருப்பப்பட்ட கோர்ஸில் சேர சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும். கலைத்துறையினர், வதந்திகள் குறித்து கலங்க வேண்டாம். உங்களின் படைப்புகளை வெளியிடுவதில் போராட வேண்டியிருக்கும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, இழப்புகளைத் தந்தாலும் சகிப்புத்தன்மையால் வெற்றிகளையும் பெற்றுத் தருவதாக அமையும்.
______________________________________________________________________

Tuesday, November 8, 2011


கந்த சஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசம்
(தேவராய சுவாமிகள் அருளியது)
காப்பு
துதிப்போர்க்கு வல்வினை போம்துன்பம்போம்நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும்நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
நூல்
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக
ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விபவ சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென
வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றூந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
இறுதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று
உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க
முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும்குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலால் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக
ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதும் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளும் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவாய் மலரடி சரணம்!
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!